முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பனி 25

அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை.  'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார்.  அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...
சமீபத்திய இடுகைகள்

நின்னையல்லால் 28

நின்னை - 28 தயக்கம் சுணக்கம் எல்லாம் துளியும் இல்லை. கிட்டத்தட்ட உத்தரவு போல தான் இருந்தது, "நம்மட பெட் ரூமுக்குள்ள வெளி ஆக்கள எடுக்காதிங்க.." என்று சாத்வி சொன்னது. மனைவி என அதிகாரம் எடுப்பது, நேரத்திற்கு உணவு பரிமாறுவதில், உடை அயர்ன் செய்து தருவதில், நேரம் தவறாமல் தேநீர் ஊற்றி தருவதில், இப்போது சொல்வது போல ரூமுக்குள்ள யாரையும் விடக் கூடாது என சட்டம் பேசுவதில் மட்டும் தானோ...  மிச்சம் மிச்சம் எல்லாம் யார் கவனிப்பதாம்??   வாமன் பதில் சொல்லாமல் நிற்க, ஹாலுக்கு சென்ற சாத்வி கடகடவென கலைத்து போட்ட சாமான்களை ஒதுக்கி, வேடிக்கை பார்த்த இரட்டை பெண்களை அழைத்து மேசையை ஒழித்து, "இதுல இருந்து படியுங்க" என்றாள். அவள் உணவு மேசை ஆக்கிய டேபிளையே படிக்கும் மேசை ஆக்கி விட்டாள் நிமிஷத்தில். "ம்ம், ஓகே" என வந்து அதில் அமர்ந்த வாமன், "லாஸ்டா எக்சர்சைஸ் தந்துட்டு போன ஞாபகம் எனக்கு. முடிச்சிட்டிங்களா??" என ஸ்டிக்ட் வாத்தியாராக மாற, சாத்வி கிச்சன் வந்தாள். எட்டு மணி இருக்கும், பிள்ளைகளை அழைத்துச் போக கமலம் வந்தார். கதவைத் திறந்த சாத்வி அவருடன் பேசிக் கொண்டிருக்க, "அ...

பனி 24

  அத்தியாயம்: 24 "அடியே தாமர... தாமர... எந்திரிடி. மணி எத்தனன்னு பாத்தியா. ரா முழுக்க அந்த ஃபோனு கழுதைய தூக்கமில்லாம நோண்ட வேண்டியது. பகல்ல எந்திரிக்க என்னைக் கத்த வைக்கிறது. என்ன பிள்ளையோ நீ. காலேஜ்க்கு நேரமாச்சின்னு கத்துவல்ல அப்ப பாத்துக்கிறேன்." என முதல் சில வார்த்தைகளை மட்டும் சத்தமாக பேசியவர், பின் வந்ததைச் சடைப்பாக முணுமுணுத்தார் தமிழரசி. சுருக்கமாக அரசி. ஊர் மதுரை என்பதாலோ என்னமோ அந்த வீட்டின் மீனாட்சியான அரசியின் ஆட்சி தான் நடைபெறுகிறது. காலையிலேயே வயலுக்குச் சென்று கீரை பறித்து எடுத்து வந்தவர். இன்னும் எழாமல் உறங்கும் மகளை கண்டு கத்திய படியே சமையலறைக்குள் சென்றார்‌.  "எம்மோய் பசிக்கிது. என்ன வச்சிருக்க? " என்றபடி சட்டியில் இருந்த கஞ்சியை எடுத்தான் பாண்டி. அவனின் கையைத் தட்டி விட்டார். "ம்மா…" என அலற, "காலங்காத்தால பல்லக் கூட வெளக்காம, சொத்து சட்டிய தூக்குற. கூறு கெட்ட கழுத. போய் வெளக்கிட்டு வா. " என்ற தாயைக் கண்டு கொள்ளாது வாயை மட்டும் கொப்பளித்து விட்டு தட்டை எடுத்துக் கொண்டு சோத்து பானையுடன் தரையில் அமர்ந்தான்.  "இருடா. நீச்சத்தண...

நின்னையல்லால் 27

நின்னை - 27 பல்கலைக்கழக பேராசிரியர், விரிவுரையாளர்களுக்கான குடியிருப்புகளுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான நடந்து செல்லும் தூரம் தான்.  வாமன் இங்கு இணைந்த முதல் ஒரு மாதமும் நடந்தே செல்வான்.  இளங் காலை குளுமையில் பச்சை வனப்பை கடந்து வளைந்து செல்லும் ஏற்ற இறக்க பாதையில் நடப்பது பிடித்தும் இருந்தது அவனுக்கு. எனினும் ஒரு காரின் அவசியம் சில நாளில் விளங்கியது. அவனை தவிர அனைவரும் ஆளுக்கு ஒரு கார் வைத்திருக்கும் போது மரியாதை சமமான மரியாதை வேண்டியும், நினைத்த நேரத்தில் டவுனுக்கு கடைக்கு சந்திக்கு செல்லவும் நாலு சக்கர வாகனம் அவசியப்பட்டது.  'கார் வாங்கு தம்பி!' என தனது பென்ஷன் புரவிஷன் பணத்தை முன் பணமாக நடராச கொடுக்க, 'அங்க மலையும் மடுவும் தம்பி.. ஓடுறது பயம்.. வேணாம்' என்று விட்டார் ஜெயந்தி. 'இல்லம்மா, ஒரு நூறு இரு நூறு மீட்டர் உள்ள தான் வரும் தூரம்.. நான் சேஃபா இருப்பன்' என வாக்கு கொடுத்து அடுத்த மாதமே வீசிங்கில் கார் எடுத்து விட்டான்.  குறுந்தூரம் ஓட்டவே வீட்டில் அனுமதி என்பதால் தான் ஊருக்கு பஸ்ஸில் வந்து போவது. இன்று அவன் யூனிவர்சிட்டி வந்து இறங்கியதும் வாமனை அறி...

like

Ad