அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை. 'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார். அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...
நின்னை - 28 தயக்கம் சுணக்கம் எல்லாம் துளியும் இல்லை. கிட்டத்தட்ட உத்தரவு போல தான் இருந்தது, "நம்மட பெட் ரூமுக்குள்ள வெளி ஆக்கள எடுக்காதிங்க.." என்று சாத்வி சொன்னது. மனைவி என அதிகாரம் எடுப்பது, நேரத்திற்கு உணவு பரிமாறுவதில், உடை அயர்ன் செய்து தருவதில், நேரம் தவறாமல் தேநீர் ஊற்றி தருவதில், இப்போது சொல்வது போல ரூமுக்குள்ள யாரையும் விடக் கூடாது என சட்டம் பேசுவதில் மட்டும் தானோ... மிச்சம் மிச்சம் எல்லாம் யார் கவனிப்பதாம்?? வாமன் பதில் சொல்லாமல் நிற்க, ஹாலுக்கு சென்ற சாத்வி கடகடவென கலைத்து போட்ட சாமான்களை ஒதுக்கி, வேடிக்கை பார்த்த இரட்டை பெண்களை அழைத்து மேசையை ஒழித்து, "இதுல இருந்து படியுங்க" என்றாள். அவள் உணவு மேசை ஆக்கிய டேபிளையே படிக்கும் மேசை ஆக்கி விட்டாள் நிமிஷத்தில். "ம்ம், ஓகே" என வந்து அதில் அமர்ந்த வாமன், "லாஸ்டா எக்சர்சைஸ் தந்துட்டு போன ஞாபகம் எனக்கு. முடிச்சிட்டிங்களா??" என ஸ்டிக்ட் வாத்தியாராக மாற, சாத்வி கிச்சன் வந்தாள். எட்டு மணி இருக்கும், பிள்ளைகளை அழைத்துச் போக கமலம் வந்தார். கதவைத் திறந்த சாத்வி அவருடன் பேசிக் கொண்டிருக்க, "அ...