முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 45

  அத்தியாயம்: 45 ஒவ்வொரு உறவிற்கும்… எதிர்பார்ப்புகள் உண்டு…  ஆனால் எதிர்பார்ப்பு இல்லாமல்… கிடைக்கும் ஒன்று அன்பு… எவ்வளவு தான் காயப்படுத்தினாலும்… நாம் நேசித்த இதயத்தை மட்டும்…  மறக்கவோ வெறுக்கவோ… முடியவில்லையெனில் அது… உண்மையான அன்பு…  பைரவியிடம் இருப்பது போல். மதுவின் காயத்தைத் தவிர வேறு எதுவும் அவளின் கண்களுக்குத் தெரியவில்லை. மையிட்ட விழிகள் கலங்கி கண்ணீரைத் தேக்கி வைத்து நின்றன.  மதுவிற்கு அழுபவரை பிடிக்காது. ஏமாற்றி காரியம் சாதிக்க சுரக்கும் கானல் நீர்,  கண்ணீர் என்பான். திருமணம் முடிந்த புதிதில் பைரவிக்கு எதற்கெடுத்தாலும் கண்ணீர் வரும்‌. தான் எதிர்பார்த்தது போல் திருமண வாழ்வு அமையவில்லை என்ற ஏமாற்றத்தில் அழுகை வர, "இதோ பாரு… கண்ணீர் விட்டுட்டே பேசுறதா இருந்தா தயவு செய்து போய்டு. நீ சொல்ற எதையும் நான் கேக்கவோ நம்பவோ மாட்டேன். போ... " எனத் தன் முன் அழும் மனைவியைத் துரத்தி விடுவான். அவளும் அப்போது எதுவும் சொல்லாது சமயலறை புகுந்து தன் அழுகையைத் தொடர்வாள்.  இப்போது வந்த அந்த நீர் எதற்கானது என உணரும் போது மதுவின் உள்ளம் பைரவியின் அன்பில் கரைய காத்தி...

பனி 44

  அத்தியாயம்: 44 "ஹலோ ராக்கி பாய்… ராக்கி பாய்… லையன்ல இருக்கிங்களா? ஹலோ... ஹலோ..‌." என மெதுவாக ஹஸ்கி வாஸ்ஸில் பேசினாள் பைரவி. ஆனால் பேசிக் கொண்டே இருந்தாள்.  "ஒரு நிமிஷம் இரு பக்கி... ஒரு பொசிஷனுக்கு வந்துக்கிறேன். உன் புருஷனுக்கு மட்டும் நான் உங்கூட கூட்டு வச்சது தெரிஞ்சது…"  "உங்களக் கூட்டு பொரியலாக்கிடுவாரு. சரியா… " எனச் சொல்லி சிரிக்க,  "தெரிஞ்சிட்டே கேக்குறியேம்மா நீ… ஆமா நான் ஹஸ்கி வாய்ஸ்ல பேசுறேன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு. ஏன்னா எம்முன்னாடி தான் உன் புருஷெ உக்காந்திருக்கான். நீ ஏன் ஹஸ்கி வாஸ்ல பேசுற?" என அவனும் அவளை போல் மெதுவாக பேச,  "சும்மா உங்களுக்கு கம்பெனி குடுப்போமேன்னு தான் பேசி பாத்தேன்."  "கம்பெனியெல்லாம் தேவையில்லை நார்மலாவே பேசு. காதுக்குள்ள நீ பேசுறது பிசாசு படத்துல வர்ற பேய் பேசுனா மாதிரி ஃபீல் ஆகுது."  "ஓகே. இப்ப நீங்க எங்க இருக்கிங்க?"  " இப்ப தான் அகாடமிக்கி வந்திருக்கான் உம்புருஷெ. ஆஃபிஸ் ரூம்ல இருக்கோம். இன்னும் பத்து நிமிசத்துல நாங்க கிளம்பிடுவோம். ஓவர்... ஓவர்… பட் இது ரொம்ப ஓவரா...

பனி 43

  அத்தியாயம்: 43 " கோலமாவா! இது எப்படி உங்க கிட்ட? நீங்களும் டிரக்ஸ் டீலிங் பண்றீங்களா! போத கும்பலுக்கும் உங்களுக்கு தொடர்பு இருக்கா? இருங்க நான் இத இப்பவே ஸ்டேஷனுக்கு இன்ஃபார்ம் பண்றேன். அந்த கமிஷனர் தன்னோட பொண்ணோட நிலமைக்கு காரணமானவன இன்னும் தேடிட்டு தான் இருக்காரு. இப்பவே போட்டு குடுக்கிறேன். " என வேகமாக இறங்க, "வெறும் தகவலா மட்டும்‌ சொன்னா! உனக்கு எப்படி ப்ரமோஷன் கிடைக்கும். நான் இத யார்க்கிட்ட இருந்து வாங்குனேன்னு தெரிஞ்சிட்டு அவன ஆதரத்தோட அரஸ்ட் பண்ணி கூட்டீட்டு போய் கமிஷ்னர் முன்னாடி நின்னேன்னு வை! அடுத்து இன்ஸ்பெக்டர் நீ தான். எவனுக்கும் கூனக்கும்பிடு போடாம ஸ்டேஷன்ல ராணி மாதிரி வளம் வரலாம்." என்க, பைரவி யோசித்தாள். ஏனெனில் அவள் அந்த கமிஷனர் மகள் சென்ற ஜீம்மிற்குச் சென்று, தீவிரமா விசாரித்த போதே அந்த கமிஷனர் மிகவும் கடுமையாக அவளைக் கண்டித்தார், உன் அதிகார வரம்பை விட்டு மீறாதே என்று. இப்போது அதே வழக்கில் மூக்கை விட்டால் என்ன ஆகும் என்று யோசிக்க! " ரொம்ப யோசிக்கிற மாதிரி இருக்கு. இது fat burner ஜிம்ல யூஸ் பண்ற சாதா கோலமாவு இல்ல. நீ எங்கிட்ட விலாவாரியா சொன்...

like

Ad