அத்தியாயம்: 5 இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன். தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக. பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான். வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது. கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள். “என்னாச்சி வெண்மா?” “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான். “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...
அத்தியாயம்: 45 ஒவ்வொரு உறவிற்கும்… எதிர்பார்ப்புகள் உண்டு… ஆனால் எதிர்பார்ப்பு இல்லாமல்… கிடைக்கும் ஒன்று அன்பு… எவ்வளவு தான் காயப்படுத்தினாலும்… நாம் நேசித்த இதயத்தை மட்டும்… மறக்கவோ வெறுக்கவோ… முடியவில்லையெனில் அது… உண்மையான அன்பு… பைரவியிடம் இருப்பது போல். மதுவின் காயத்தைத் தவிர வேறு எதுவும் அவளின் கண்களுக்குத் தெரியவில்லை. மையிட்ட விழிகள் கலங்கி கண்ணீரைத் தேக்கி வைத்து நின்றன. மதுவிற்கு அழுபவரை பிடிக்காது. ஏமாற்றி காரியம் சாதிக்க சுரக்கும் கானல் நீர், கண்ணீர் என்பான். திருமணம் முடிந்த புதிதில் பைரவிக்கு எதற்கெடுத்தாலும் கண்ணீர் வரும். தான் எதிர்பார்த்தது போல் திருமண வாழ்வு அமையவில்லை என்ற ஏமாற்றத்தில் அழுகை வர, "இதோ பாரு… கண்ணீர் விட்டுட்டே பேசுறதா இருந்தா தயவு செய்து போய்டு. நீ சொல்ற எதையும் நான் கேக்கவோ நம்பவோ மாட்டேன். போ... " எனத் தன் முன் அழும் மனைவியைத் துரத்தி விடுவான். அவளும் அப்போது எதுவும் சொல்லாது சமயலறை புகுந்து தன் அழுகையைத் தொடர்வாள். இப்போது வந்த அந்த நீர் எதற்கானது என உணரும் போது மதுவின் உள்ளம் பைரவியின் அன்பில் கரைய காத்தி...