முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறவு 21

  அத்தியாயம்: 21   ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள்‌   அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான்.   எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான்.   வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது…   முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...

பனி 110

  அத்தியாயம்: 110 "குற்ற உணர்ச்சி. " என்றவன் கண்களில் வேதனையைக் காண முடிந்தது.  ஏனெனில் சுடர் புத்திசாலி பெண். கடலைப் போடும் எண்ணத்துடன் அனுப்பும் குறுந்தகவல்கள் எதற்கும் மதிப்பளித்தது இல்லை. பதிலளித்ததும் இல்லை. அப்படி இருக்க அவள் ஏமாந்தது தீஷித் என்ற ஒருவனின் பெயரில். அதுவும் போலியானது என்று அறியாது. அவனின் பெயரைத் தவிர வேற யாராக இருந்தாலும் அவள் பேசியிருக்க மாட்டாள்.  "என்னோட பேர சொல்லி ஒருத்தெ ஏமாத்திருக்கான். பல மாசங்களா நான்னு நினைச்சி அவளுக்குள்ள பொய்யான காதல வளத்து, கற்பனைல மிதக்க விட்டு நம்பிக்க துரோகம் நடந்திருக்கு. அது தெரிஞ்சும் எப்படிச் சும்மா இருக்கச் சொல்லுற? அவளப் பிடிக்காதவங்க, பழி வாங்க தான் இதப் பண்ணிருந்தாலும், ஏன் என்னோட பேர யூஸ் பண்ணணும்.  அவளுக்கு எம்மேல எவ்ளோ நம்பிக்கையும் காதலும் இருந்திருந்தா, நான்னு நம்பி முன்ன பின்ன தெரியாத ஒருத்தன் கூட காதல் வளத்திருப்பா. அது பொய்ன்னு தெரியும் போது எவ்ளோ வலிச்சிருக்கும். ஏமாற்றம். நாம நம்புன ஒருத்தர் கிட்ட இருந்து கிடைக்கிற ஏமாற்றம் வலிய தரும்.‌ அத நான் அவளோட கண்ணுல பாத்தேன். அவள ஏமாத்துனது நான்னு தான நின...

பனி 109

  அத்தியாயம்: 109 "நீ ஏன் இன்னும் தூங்கல?" என்றது மதுவின் குரல்.  " ஏன்னா வரல. தூங்கல. இந்தக் கேள்வி கேக்கத்தா இந்த நேரத்துல கால் பண்ணிங்களா தீஷ். " என தீஷித்திடம் கேட்க, பாவம் இரவு நேரம் கூட சூரியன் தகித்துக் கொண்டிருந்தது மதுவிற்குள். "ஒரு சின்ன கேம். " தீஷித். "விளையாடுற நேரமா இது. "  " விளையாடலன்னா மதுசூதனனுக்குத் தூக்கம் வந்திடுமாம். அப்றம் கார் டெல்லில நிக்காது கொட சாஞ்சி எங்கயாது கவுந்து கடக்கும்னு சொன்னான். " என்றவன் சொன்னதும் சரியே.  எப்பொழுதும் காரில் ஏறி அமர்ந்து விட்டால் மது பைரவியை உறங்க விட மாட்டான். கன்னம் தட்டி பேசு பேசு என்பவனே.  "சரி. என்ன கேம்?"  "ஒரு பத்து கேள்வி. மனசுல தோணுனத பதிலா சொல்லு. "  "ஓகே தான். ஆனா இதுல எதுவும் உள்குத்து இருக்கா. " என்றவளுக்கு தெரியுமே இருவரும் அடித்துக் கொள்வது. இன்னேரம் சண்டை‌ போட்டுக் கொண்டால் எப்படி டேமேஜ் இல்லாமல் வருவார்கள் என்பதால் சந்தேகமாக கேட்டாள். "எந்தக் குத்தும் இல்ல. ஒரு ஃபன்னுக்காக. entertainment. அப்படி தான் மதுசூதனா. " என்க, அவன் முறை...

பனி 108

  அத்தியாயம்: 108 புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும். ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்லை. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.  அது திருக்குறள். நட்பு பற்றிய அவரின் ஏழடி குறளுக்குப் பலர் விளக்க உரை எழுதி இருந்தாலும் உதாரணமாக இங்கு நம் நாயகர்களைக் காட்டுகிறேன்.  தீஷித் மது இருவரின் வாழ்க்கை முறை பழக்கம் குணம் எனப் பல வித்தியாசப்பட்டாலும் இருவரின் எண்ண ஓட்டங்கள் ஒத்து இருந்தன. அது சில மணி நேரங்களிலேயே இருவருக்குள்ளும் அழகான நட்பை வளர்ந்திருந்தது. அதை முதலில் வளர்த்தவன் தீஷித்தே. மதுவைப் பற்றி அறிந்து கொள்கிறேன் என்று கேள்வி கணைகளைத் தொடுத்தவனுக்கு அவன் தராத சில பதில்களில் உருகித் தான் போனான். அந்த உருக்கம் மதுவின் மீது நட்பு மதிப்பு எனப் பலவற்றை உண்டு பண்ணியது. இலகுவாக பேச்சுக்கள் தொடரந்தது. அதுவும் பல மணி நேரங்களுக்கு. " ம்மா...‌ ம்மா. நான் நல்லாத்தா இருக்கேன். ப்ளீஸ் கண்ணீர் விடுறத நிப்பாட்டுங்க. மாத்திர போட்டிங்களா. கற்பகமக்கா என்ன பண்றாங்க. தயவு செய்து எனக்கு எ...

like

Ad