அத்தியாயம்: 5 இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன். தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக. பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான். வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது. கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள். “என்னாச்சி வெண்மா?” “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான். “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...
அத்தியாயம்: 110 "குற்ற உணர்ச்சி. " என்றவன் கண்களில் வேதனையைக் காண முடிந்தது. ஏனெனில் சுடர் புத்திசாலி பெண். கடலைப் போடும் எண்ணத்துடன் அனுப்பும் குறுந்தகவல்கள் எதற்கும் மதிப்பளித்தது இல்லை. பதிலளித்ததும் இல்லை. அப்படி இருக்க அவள் ஏமாந்தது தீஷித் என்ற ஒருவனின் பெயரில். அதுவும் போலியானது என்று அறியாது. அவனின் பெயரைத் தவிர வேற யாராக இருந்தாலும் அவள் பேசியிருக்க மாட்டாள். "என்னோட பேர சொல்லி ஒருத்தெ ஏமாத்திருக்கான். பல மாசங்களா நான்னு நினைச்சி அவளுக்குள்ள பொய்யான காதல வளத்து, கற்பனைல மிதக்க விட்டு நம்பிக்க துரோகம் நடந்திருக்கு. அது தெரிஞ்சும் எப்படிச் சும்மா இருக்கச் சொல்லுற? அவளப் பிடிக்காதவங்க, பழி வாங்க தான் இதப் பண்ணிருந்தாலும், ஏன் என்னோட பேர யூஸ் பண்ணணும். அவளுக்கு எம்மேல எவ்ளோ நம்பிக்கையும் காதலும் இருந்திருந்தா, நான்னு நம்பி முன்ன பின்ன தெரியாத ஒருத்தன் கூட காதல் வளத்திருப்பா. அது பொய்ன்னு தெரியும் போது எவ்ளோ வலிச்சிருக்கும். ஏமாற்றம். நாம நம்புன ஒருத்தர் கிட்ட இருந்து கிடைக்கிற ஏமாற்றம் வலிய தரும். அத நான் அவளோட கண்ணுல பாத்தேன். அவள ஏமாத்துனது நான்னு தான நின...