முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 110

  அத்தியாயம்: 110 "குற்ற உணர்ச்சி. " என்றவன் கண்களில் வேதனையைக் காண முடிந்தது.  ஏனெனில் சுடர் புத்திசாலி பெண். கடலைப் போடும் எண்ணத்துடன் அனுப்பும் குறுந்தகவல்கள் எதற்கும் மதிப்பளித்தது இல்லை. பதிலளித்ததும் இல்லை. அப்படி இருக்க அவள் ஏமாந்தது தீஷித் என்ற ஒருவனின் பெயரில். அதுவும் போலியானது என்று அறியாது. அவனின் பெயரைத் தவிர வேற யாராக இருந்தாலும் அவள் பேசியிருக்க மாட்டாள்.  "என்னோட பேர சொல்லி ஒருத்தெ ஏமாத்திருக்கான். பல மாசங்களா நான்னு நினைச்சி அவளுக்குள்ள பொய்யான காதல வளத்து, கற்பனைல மிதக்க விட்டு நம்பிக்க துரோகம் நடந்திருக்கு. அது தெரிஞ்சும் எப்படிச் சும்மா இருக்கச் சொல்லுற? அவளப் பிடிக்காதவங்க, பழி வாங்க தான் இதப் பண்ணிருந்தாலும், ஏன் என்னோட பேர யூஸ் பண்ணணும்.  அவளுக்கு எம்மேல எவ்ளோ நம்பிக்கையும் காதலும் இருந்திருந்தா, நான்னு நம்பி முன்ன பின்ன தெரியாத ஒருத்தன் கூட காதல் வளத்திருப்பா. அது பொய்ன்னு தெரியும் போது எவ்ளோ வலிச்சிருக்கும். ஏமாற்றம். நாம நம்புன ஒருத்தர் கிட்ட இருந்து கிடைக்கிற ஏமாற்றம் வலிய தரும்.‌ அத நான் அவளோட கண்ணுல பாத்தேன். அவள ஏமாத்துனது நான்னு தான நின...

பனி 109

  அத்தியாயம்: 109 "நீ ஏன் இன்னும் தூங்கல?" என்றது மதுவின் குரல்.  " ஏன்னா வரல. தூங்கல. இந்தக் கேள்வி கேக்கத்தா இந்த நேரத்துல கால் பண்ணிங்களா தீஷ். " என தீஷித்திடம் கேட்க, பாவம் இரவு நேரம் கூட சூரியன் தகித்துக் கொண்டிருந்தது மதுவிற்குள். "ஒரு சின்ன கேம். " தீஷித். "விளையாடுற நேரமா இது. "  " விளையாடலன்னா மதுசூதனனுக்குத் தூக்கம் வந்திடுமாம். அப்றம் கார் டெல்லில நிக்காது கொட சாஞ்சி எங்கயாது கவுந்து கடக்கும்னு சொன்னான். " என்றவன் சொன்னதும் சரியே.  எப்பொழுதும் காரில் ஏறி அமர்ந்து விட்டால் மது பைரவியை உறங்க விட மாட்டான். கன்னம் தட்டி பேசு பேசு என்பவனே.  "சரி. என்ன கேம்?"  "ஒரு பத்து கேள்வி. மனசுல தோணுனத பதிலா சொல்லு. "  "ஓகே தான். ஆனா இதுல எதுவும் உள்குத்து இருக்கா. " என்றவளுக்கு தெரியுமே இருவரும் அடித்துக் கொள்வது. இன்னேரம் சண்டை‌ போட்டுக் கொண்டால் எப்படி டேமேஜ் இல்லாமல் வருவார்கள் என்பதால் சந்தேகமாக கேட்டாள். "எந்தக் குத்தும் இல்ல. ஒரு ஃபன்னுக்காக. entertainment. அப்படி தான் மதுசூதனா. " என்க, அவன் முறை...

பனி 108

  அத்தியாயம்: 108 புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும். ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்லை. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.  அது திருக்குறள். நட்பு பற்றிய அவரின் ஏழடி குறளுக்குப் பலர் விளக்க உரை எழுதி இருந்தாலும் உதாரணமாக இங்கு நம் நாயகர்களைக் காட்டுகிறேன்.  தீஷித் மது இருவரின் வாழ்க்கை முறை பழக்கம் குணம் எனப் பல வித்தியாசப்பட்டாலும் இருவரின் எண்ண ஓட்டங்கள் ஒத்து இருந்தன. அது சில மணி நேரங்களிலேயே இருவருக்குள்ளும் அழகான நட்பை வளர்ந்திருந்தது. அதை முதலில் வளர்த்தவன் தீஷித்தே. மதுவைப் பற்றி அறிந்து கொள்கிறேன் என்று கேள்வி கணைகளைத் தொடுத்தவனுக்கு அவன் தராத சில பதில்களில் உருகித் தான் போனான். அந்த உருக்கம் மதுவின் மீது நட்பு மதிப்பு எனப் பலவற்றை உண்டு பண்ணியது. இலகுவாக பேச்சுக்கள் தொடரந்தது. அதுவும் பல மணி நேரங்களுக்கு. " ம்மா...‌ ம்மா. நான் நல்லாத்தா இருக்கேன். ப்ளீஸ் கண்ணீர் விடுறத நிப்பாட்டுங்க. மாத்திர போட்டிங்களா. கற்பகமக்கா என்ன பண்றாங்க. தயவு செய்து எனக்கு எ...

like

Ad