அத்தியாயம்: 5 இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன். தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக. பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான். வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது. கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள். “என்னாச்சி வெண்மா?” “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான். “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...
அத்தியாயம்: 79 ஐ போன்களுக்கே உரித்தான ப்ரத்தேக ரிங்டோன் அது. வெகு நேரமாகலாம் அடிக்கவில்லை. இப்போது தான் இசைக்க தொடங்கியது. யார் அழைப்பது என்று தெரிந்தாலும் உடனே எடுக்காமல், சில நிமிடங்கள் கடத்தியவன், இதோ இசைத்து முடிக்கப் போகிறேன் என்று சொல்லிய செல்ஃபோனின் கடைசி நொடி ரிங் டோனில் அட்டன் செய்து காதில் வைத்தான், ருத்ரதேவ். வந்த வேலையை இனிதே முடித்து விட்டு இனி தன் இல்லம் நோக்கி செல்ல தன் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் அவன். விடியும் போது சிவாஸ் பேலஸ்ஸில் இருக்க வேண்டும். இது அமிர்தாவின் கட்டளை. " …. " செல்ஃபோனைக் காதில் வைத்தாலும் அழைத்தவரிடம் பேசப் பிடிக்காது அமைதியாய் இருக்க, " ருத்ரா... வாசு… அங்க வந்தாளா?. " எனப் படபடப்புடனும் பயத்துடனும் தவிப்புடனும் வந்தது அந்த குரல். கார்த்திகேயனின் குரல். அது புரியாது. "இல்ல. " என்றான் பட்டு கத்தரித்தது போல். " வேற எங்க இப்பான்னு தெரியுமா?. " " எனக்கு என்னோட வருங்கால மனைவிய வேவு பாக்குற பழக்கமெல்லாம் இல்ல. சோ எனக்கு தெரியாது. " என்றான் நக்கலாக. "ருத்ரா, அவளோட ஃபோன் வீட்டுல இர...