முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

நேசிப்பாயா 79

  அத்தியாயம்: 79 ஐ போன்களுக்கே உரித்தான ப்ரத்தேக ரிங்டோன் அது. வெகு நேரமாகலாம் அடிக்கவில்லை. இப்போது தான் இசைக்க தொடங்கியது.  யார் அழைப்பது என்று தெரிந்தாலும் உடனே எடுக்காமல், சில நிமிடங்கள் கடத்தியவன், இதோ இசைத்து முடிக்கப் போகிறேன் என்று சொல்லிய செல்ஃபோனின் கடைசி நொடி ரிங் டோனில் அட்டன் செய்து காதில் வைத்தான், ருத்ரதேவ்.  வந்த வேலையை இனிதே முடித்து விட்டு இனி தன் இல்லம் நோக்கி செல்ல தன் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் அவன். விடியும் போது சிவாஸ் பேலஸ்ஸில் இருக்க வேண்டும். இது அமிர்தாவின் கட்டளை.  " …. " செல்ஃபோனைக் காதில் வைத்தாலும் அழைத்தவரிடம் பேசப் பிடிக்காது அமைதியாய் இருக்க, " ருத்ரா... வாசு… அங்க வந்தாளா?. " எனப் படபடப்புடனும் பயத்துடனும் தவிப்புடனும் வந்தது அந்த குரல். கார்த்திகேயனின் குரல். அது புரியாது.‌ "இல்ல. " என்றான் பட்டு கத்தரித்தது போல்.  " வேற எங்க இப்பான்னு தெரியுமா?. " " எனக்கு என்னோட வருங்கால மனைவிய வேவு பாக்குற பழக்கமெல்லாம் இல்ல. சோ எனக்கு தெரியாது. " என்றான் நக்கலாக.  "ருத்ரா, அவளோட ஃபோன் வீட்டுல இர...

நேசிப்பாயா 78

  அத்தியாயம்: 78 பிறை மலர்ந்த... இரவு நேரமும்... ஈரம் தோய்ந்த... தென்றல் காற்றும்... வலி தரும்... நீ இல்லாத… தனிமையில்... இதை நம் ருத்ராவிற்குச் சொன்னால் சரியாக இருக்கும். ஹோட்டல் அறையின் பஞ்சு மெத்தையில் படுத்தவனுக்கு நாயகி இன்றி அவனின் படுக்கை முள்ளெனக் குத்தி, ‘அவளை உடன் அழைத்து வா. சுகமும் தூக்கமும் தருகிறேன்.’ என்றது. மஞ்சம் தான் அவனைத் துரத்தி விட்டது என்று எழுந்து பால்கனிக்குச் செல்ல, நேற்று அவள் தன்னை அணைத்து தந்த இதழொற்றல் நினைவு வந்தது. அவளுடனானத் தனிமை வேண்டுமென்றிருந்தது அவனுக்கு. அவளைக் கை அணைப்பில் வைத்து இரவு முழுவதும் கள்ளத்தனமாக செய்ய நினைத்தவனின் ஆசை நிறைவேற வேண்டும் என்றால் வாசு வேண்டும்.  முதலில் அவளின் வீட்டிற்குச் செல்லவேண்டும். எண்ணிய கணத்தினிலே புறப்பட்டு விட்டான். காரைத் தூர நிறுத்தி விட்டு யோசனையில் இருந்தான் ருத்ரா.‌ வீட்டின் உள்ளே நுழைய கதவைத் தட்ட வேண்டும் இல்லையேல் காலிங்பெல்லை அழுத்த வேண்டும். ரெண்டில் எது செய்தாலும் மிஸ்டர் கார்த்திகேயன் வந்து நிற்பான். 'இந்த நல்ல மூடுல அந்தாளு மூஞ்சிய பாத்தா… வர்ற ரொமான்ஸ்ஸும் வத்தி போய்டும். அதுனால வேற வழியா உ...

நேசிப்பாயா 77

அத்தியாயம்: 77 மெத்தையில் படுத்து உத்திரத்தில் தொங்கிய மின் விசிறியைப் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.  ஒன்றை கொண்டை தான். அதை மையமாகக் கொண்டு மூன்று இறக்கைகளும் சுழல்கிறது. இல்லை அப்படிச் சொல்ல கூடாது. மூன்று இறக்கைகளால் தான் நடுவில் இருக்கும் கொண்டைக்கு மதிப்பு.   தன்னை மதிப்பு மிக்கவனாக மாற்றியது தன் வாழ்வில் வந்த மூன்று பெண்கள்.  இன்று அவர்களின் நினைவு அதிகமாக வந்தது.  'ஒரு நிமிஷம். இவனோட லைஃப்ல மூணு கேர்ள்ஸ்ஸா. ஒன்னு கண்டிப்பா அவனோட பொண்ணு தான். வாசவி. அடுத்து ஜோஹிதா. வைஃப் அவளும் இப்பப் பக்கத்துலயே இல்ல. காலைல இருந்து அவளோட நினப்பாவே திரியுறான். ஓகே... அப்ப மூனாவது யாரு?   வாங்க பாக்கலாம். நம்ம வெளிநாட்டு ஜோசிக்காரெ டேனியல் சொன்னது உண்மையா இல்லையான்னு.' " என்ன கார்த்தி. இன்னைக்காது சமாதானம் பண்ணியா?. " அப்சத். இது வழக்கமான தினசரி கேள்வியாய் மாறி இருந்தது.  "எங்க மச்சி... பக்கத்துல போனாலே தீயா முறைக்கிறா. பேசுனா… கண்ணுக்கு முன்னாடியே பஞ்ச வாங்கி காதுல வைச்சிக்கிறா. இதுல நெருக்கி போனா... என்னை சூசைட் பண்ண வச்சிடுவா. ச்ச...‌ இந்தகீ காதல ம...

like

Ad