அத்தியாயம்: 21 ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள் அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான். எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான். வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது… முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...
அத்தியாயம்: 79 ஐ போன்களுக்கே உரித்தான ப்ரத்தேக ரிங்டோன் அது. வெகு நேரமாகலாம் அடிக்கவில்லை. இப்போது தான் இசைக்க தொடங்கியது. யார் அழைப்பது என்று தெரிந்தாலும் உடனே எடுக்காமல், சில நிமிடங்கள் கடத்தியவன், இதோ இசைத்து முடிக்கப் போகிறேன் என்று சொல்லிய செல்ஃபோனின் கடைசி நொடி ரிங் டோனில் அட்டன் செய்து காதில் வைத்தான், ருத்ரதேவ். வந்த வேலையை இனிதே முடித்து விட்டு இனி தன் இல்லம் நோக்கி செல்ல தன் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் அவன். விடியும் போது சிவாஸ் பேலஸ்ஸில் இருக்க வேண்டும். இது அமிர்தாவின் கட்டளை. " …. " செல்ஃபோனைக் காதில் வைத்தாலும் அழைத்தவரிடம் பேசப் பிடிக்காது அமைதியாய் இருக்க, " ருத்ரா... வாசு… அங்க வந்தாளா?. " எனப் படபடப்புடனும் பயத்துடனும் தவிப்புடனும் வந்தது அந்த குரல். கார்த்திகேயனின் குரல். அது புரியாது. "இல்ல. " என்றான் பட்டு கத்தரித்தது போல். " வேற எங்க இப்பான்னு தெரியுமா?. " " எனக்கு என்னோட வருங்கால மனைவிய வேவு பாக்குற பழக்கமெல்லாம் இல்ல. சோ எனக்கு தெரியாது. " என்றான் நக்கலாக. "ருத்ரா, அவளோட ஃபோன் வீட்டுல இர...