அத்தியாயம்: 5 இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன். தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக. பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான். வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது. கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள். “என்னாச்சி வெண்மா?” “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான். “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...
அத்தியாயம்: 15 இறை வழிபாடு என்பது நம்பிக்கையைச் சார்ந்தது. அனைவரிடத்திலும் உண்டு. அந்த நம்பிக்கை என்னிடம் தான் அதிகம் உள்ளது, என்று விளம்பர படுத்தாது, உன்னிடம் குறைவாக உள்ளது என்று விமர்சனம் செய்யாது, உன்னிடம் இல்லை என்று ஒப்பிட்டுப் பார்க்காது இருக்க வேண்டும். உயிர்களை உயிர்களாய் மதித்து நடத்துவதே உண்மையான இறை வழிபாடாகும். திருவிழா, பண்டிகை என்பது ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடுவது. தூர இருக்கும் சொந்தங்களை அது ஒன்று சேர்க்கும். ஜாதி, மதம், இனமென எதையும் பாராது சந்தோஷம் ஒன்றை மட்டுமே குறியாய் கொண்டிருப்பதே திருவிழாவின் நோக்கம். அதுபோல் தான் இங்கும் நடந்து கொண்டிருக்கிறது. ஏழு கிராமத்து மக்கள். எந்த ஒரு விழா பண்டிகை என்றாலும் ஒற்றுமையாக, வேறுபாடு பார்க்காது கொண்டாடுவது வழக்கம். அந்தந்த ஊர் தலைவர்கள் எப்பொழுதுமே சிறிய விழாக்களைக் கூடத் திருவிழாபோல் சிறப்பாக ஏற்று நடத்துவர். இந்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகமும் அப்படித்தான். கோயில் சிறியதாக இருந்தாலும் அதற்கு வந்து செல்லும் மக்களின் அளவு எண்ணிட முடியாததாக இருந்தது. ரங்குரா...