முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறவு 21

  அத்தியாயம்: 21   ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள்‌   அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான்.   எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான்.   வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது…   முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...

அன்பே 15

  அத்தியாயம்: 15 இறை வழிபாடு என்பது நம்பிக்கையைச் சார்ந்தது. அனைவரிடத்திலும் உண்டு. அந்த நம்பிக்கை என்னிடம் தான் அதிகம் உள்ளது, என்று விளம்பர படுத்தாது, உன்னிடம் குறைவாக உள்ளது என்று விமர்சனம் செய்யாது, உன்னிடம் இல்லை என்று ஒப்பிட்டுப் பார்க்காது இருக்க வேண்டும்.‌ உயிர்களை உயிர்களாய் மதித்து நடத்துவதே உண்மையான இறை வழிபாடாகும்.‌ திருவிழா, பண்டிகை என்பது ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடுவது. தூர இருக்கும் சொந்தங்களை அது ஒன்று சேர்க்கும். ஜாதி, மதம், இனமென எதையும் பாராது சந்தோஷம் ஒன்றை‌ மட்டுமே குறியாய் கொண்டிருப்பதே திருவிழாவின் நோக்கம்.  அதுபோல் தான்‌ இங்கும் நடந்து கொண்டிருக்கிறது. ஏழு கிராமத்து மக்கள். எந்த ஒரு விழா‌ பண்டிகை என்றாலும் ஒற்றுமையாக, வேறுபாடு பார்க்காது கொண்டாடுவது வழக்கம். அந்தந்த ஊர் தலைவர்கள் எப்பொழுதுமே சிறிய விழாக்களைக் கூடத் திருவிழாபோல் சிறப்பாக ஏற்று நடத்துவர். இந்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகமும் அப்படித்தான். கோயில் சிறியதாக இருந்தாலும் அதற்கு வந்து செல்லும் மக்களின் அளவு எண்ணிட முடியாததாக இருந்தது. ரங்குரா...

அன்பே 14

  அத்தியாயம்: 14 "அகி… ஆதி... நில்லுங்க. எனக் கைக்கு அகப்படாமல் ஓடிய சிசிறுவர்களைக் குளிக்க வைத்து உடைமாற்ற வைப்பது மிகவும் கடினமாக இருந்தது ஹரிணிக்கு. "ஐய்யைய. கிரவுண்டுல விளையாட வேண்டிய கபடிய, நாலு சுவரு இருக்குற ரூம் குள்ள விளையாடுறது ரொம்ப தப்பு. பம்கின், இவனுங்க ரெண்டு பேரும் ஒன்னா இருந்தா சமாளிக்கிறது கஷ்டம். உன்னைய பாத்தாலும் பாவமா தா இருக்கு. அதுனால நா உங்களுக்கு உதவி பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். அகிலன நா கூட்டீட்டு போறேன். வா மாப்ள இந்த வயசான பம்கின் கையால டிரெஸ் மாத்துறத விட ஜெனி அக்காவோட பூபோலக் கையால மாத்திப்போம். நமக்குப் பவுடர் லாம் அடிச்சி விட்டு ஜம்முன்னு நம்மள கிளப்பி விடுவாங்க."என நந்து அகிலனை தூக்கிக் கொண்டான். ஹரிணி,"உங்க இம்ச தாங்க முடியாம பிளிச்சிங்க பவுடர தா அடிச்சி விடப்போறா அவெ."  "எதுவா இருந்தாலும் ஜெனி அக்கா கையால கிடைச்சா போதும். பாய்ஸனும் பஞ்சாமிர்தமாகும்." "அப்பப் போய் அவக்கிட்டையே டிரெஸ் மாத்திக்கங்க. இந்தா… இதுல உங்க ரெண்டு பேத்துக்கும் வேட்டி‌ சட்ட இருக்கு. நீங்கக் கிளம்பீட்டு ஜெனியையும் ரெடியா இருக்கச் சொல்லுங்...

அன்பே 13

அத்தியாயம்: 13 தட்டில் இரண்டு உளுந்த வடையை எடுத்த கௌதம், அதை ஸ்பூனில் உதவியால் அறுவை சிகிச்சை செய்து உள்ளிருக்கும் மிளகு மற்றும் பச்சை மிளகாய்களை பத்திரமாக எடுத்து வெளியை வைத்து விட்டு, ஒரு கிண்ணம் நிறைய சாம்பாரை ஊற்றி அதனுள் வடையை புதைத்து வைத்தான். "இது அநியாயம் ண்ணே."பிரகாஷ். கொஞ்ச கோபமா இருப்பது போல் தெரிந்தது.    "எது டா அநியாயம். உனக்கு வேணுமுன்னா உள்ள போய் வாங்கிக்க டா. இது மை வைஃபுக்கு எடுத்துட்டு போறேன். மிளகு சாப்ட்டா என்னோட பேபிக்கும் அவளுக்குள்ள இருக்குற பேபிக்கும் உறைக்கும்ல. அதா எல்லாத்தையும் டிஸ்போஸ் பண்ணீட்டு என்னோட மதிய பாக்க போறேன்." "நீ பண்றது எதுவுமே நல்லா இல்லண்ணே."என மேல் மூச்சு வாங்க பேசினான். "டேய்… உளுந்த வடைய சாம்பார்ல ஊற வச்சி சாப்ட்டா உடம்புக்கு நல்லதுன்னு இஸ்ரோ விஞ்ஞானிகளே‌ சொல்றானுங்க. பாக்க வேற மாறி இருந்தாலும், இதோட ருசிய அடிச்சிக்கவே முடியாது. இந்தா… அண்ணே உனக்காக ஒரு வாய் ஊட்டுறேன்."எனப் பிரகாஷிற்கு பங்கு குடுக்க, அதை வாங்கிக் கொண்டவன், மீண்டும் ஆரம்பித்தான். "நியாயமா ண்ணே இதல்லாம்." "டேய், இதுக்கு...

like

Ad