அத்தியாயம்: 5 இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன். தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக. பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான். வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது. கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள். “என்னாச்சி வெண்மா?” “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான். “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...
அத்தியாயம்: 36 "வாசு... வாசு… என்னோட கைய யாரோ சுரண்டுற மாதிரி இருக்கு. " என்றாள் தன்யா வாசுவின் காதருகில். " நீ என்ன லக்கி ட்ரா கூப்பன்னா?. சுரண்டிச் சுரண்டி அதிஷ்டத்த பரிசோதிக்க. " என்றவளின் குரலில் விளையாடாதே தன்யா என்ற பொருள் இருந்தது. " ம்ச்... வாசு நான் பொய் சொல்லல. நான் பாக்காத நேரம் அந்தாளு என்னைப் பாக்குறான். நான் பாத்தா திரும்பிங்கிறான். " "உங்கூட அவனுக்கு விளையாடணும்னு தோணுது போல. நீங்க அந்தப் பக்கமா ஓரமா போய் விளையாடுங்க. எங்கள டிஸ்டப் பண்ணாதிங்க. நாங்களே தி கிரேட் கிரிகாலான் அளவுக்கு இல்லன்னாலும் ஓரளவுக்கு தான் இந்த மேஜிக் ஷோ இருக்கேன்னு சோகமா பாத்துட்டு இருக்கேன். இதுல நீ வேற. " தன்யா திரும்பி அந்த ஆடவனைப் பார்த்தாள். அத்தனை நேரம் அவள் பக்கம் திரும்பியிருந்த கழுத்து இப்போது வேறு பக்கம் திரும்பிக் கொண்டது. "வாசு... வாசு… இப்ப அவெ என்னைப் பாத்தான். ஆனா நான் பாக்கவும் திரும்பிட்டான். " என அவசர அவசரமாகச் சொல்ல, வாசு எட்டி பார்த்தாள். முகம் சரியாக அந்த இருளில் தெரியவில்லை. " யாருன்னு எனக்குச் சரியா தெரியலயே. " ...