முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

நேசிப்பாயா 36

  அத்தியாயம்: 36 "வாசு... வாசு… என்னோட கைய யாரோ சுரண்டுற மாதிரி இருக்கு. " என்றாள் தன்யா வாசுவின் காதருகில். " நீ என்ன லக்கி ட்ரா கூப்பன்னா?. சுரண்டிச் சுரண்டி அதிஷ்டத்த பரிசோதிக்க. " என்றவளின் குரலில் விளையாடாதே தன்யா என்ற பொருள் இருந்தது. " ம்ச்... வாசு நான் பொய் சொல்லல. நான் பாக்காத நேரம் அந்தாளு என்னைப் பாக்குறான். நான் பாத்தா திரும்பிங்கிறான். " "உங்கூட அவனுக்கு விளையாடணும்னு தோணுது போல. நீங்க அந்தப் பக்கமா ஓரமா போய் விளையாடுங்க. எங்கள டிஸ்டப் பண்ணாதிங்க. நாங்களே தி கிரேட் கிரிகாலான் அளவுக்கு இல்லன்னாலும் ஓரளவுக்கு தான் இந்த மேஜிக் ஷோ இருக்கேன்னு சோகமா பாத்துட்டு இருக்கேன். இதுல நீ ‌வேற. " தன்யா திரும்பி அந்த ஆடவனைப் பார்த்தாள். அத்தனை நேரம் அவள் பக்கம் திரும்பியிருந்த கழுத்து இப்போது வேறு பக்கம் திரும்பிக் கொண்டது. "வாசு... வாசு… இப்ப அவெ என்னைப் பாத்தான். ஆனா நான் பாக்கவும் திரும்பிட்டான். " என அவசர அவசரமாகச் சொல்ல, வாசு எட்டி பார்த்தாள். முகம் சரியாக அந்த இருளில் தெரியவில்லை.‌ " யாருன்னு எனக்குச் சரியா தெரியலயே. "  ...

நேசிப்பாயா 35

  அத்தியாயம்: 35 சிறுவர்கள் பூங்கா‌. அந்த விடுதிக்கு வந்து தங்குபவர்கள் ஜாக்கிங் வாக்கிங் செய்ய வட்ட வடிவ பாதைகள் அமைத்து, மத்தியில் சிறுவர்கள் விளையாட என ஊஞ்சல் ஷீ-ஷா சறுக்கல் என வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அங்குள்ள ஷீ-ஷா வில் அமர்ந்திருந்தாள் தன்யா. அவளுக்கு நிகராகச் சிறு பெண் ரோகிணி எதிரில் உள்ள இருக்கையில் அமர்ந்திருக்க, ரோகிணி காற்றில் கால்களைத் தொங்க விட்டபடி உயரத்தில் இருந்தாள். தன்யாவோ தரையில் அமர்ந்திருப்பது போல் அமர்ந்து கையில் தோசை அளவுக்குப் பெரிதாக இருக்கும் ஒரு லாலிப்பாப்பைச் சுவைத்துக் கொண்டு இருந்தாள். "அத்தை, காலு வலிக்குது. கீழ இறக்கி விடுங்க. " என்றாள் பெண். அவளின் கையிலும் அதே அளவில் லாலிப்பாப். "முடியாது டி குட்டி சாத்தான். நானே இப்பத் தான் வசதியா செட்டில் ஆகிருக்கேன்‌‌. அதுக்குள்ள எந்திரிக்க சொல்ற. கொஞ்ச நேரம் இரு அங்கேயே. " என்றவள் ரசித்து ரசித்துச் சுவைத்தாள் அந்த லாலிப்பாப்பை‌‌. " அத்தை போதும். என்னைக் கீழே இறக்கி‌ விட்டுட்டு என்னனாலும் பண்ணுங்க. ஒரு கைல கம்பிய பிடிச்சிட்டு ஒரு கைல லாலிப்பாப்ப சாப்பிடுறது கஷ்டமா இருக்கு. " என்க. த...

நேசிப்பாயா 34

  அத்தியாயம்: 34 காலை உணவிற்காக மேஜையில் அப்பா மகள் என இருவரும் அமர, ஜோஹிதா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு பரிமாறினார். " நான் எங்கையும் போகலை. ஸாரி. நான் அதிகமாவே பேசிட்டேன். உங்ககிட்டையும் உஷா ஆன்டி கிட்டையும், வெரி வெரி ஸாரி. " எனச் சின்னக் குரலில் சொல்ல, ஜோஹிதா முறைத்தார். "அதுவரைக்கும் நான் அமைதியாத்தான் பேசிட்டு இருந்தேன். அந்த உஷா ஆன்டி தான் ஆம்பளை பொம்பளைன்னு பேச்ச டைலர்ட் பண்ணி விட்டாங்க. அதான். பேசிட்டேன். ஸாரி ஜோஹிம்மா. " என்க, அவளின் தட்டில் திணை அடையை வைத்துவிட்டு கிச்சனுக்குள் சென்றார். "கார்த்திப்பா ஜோஹிதாம்மா பேச மாட்டேங்கிறாங்க. " எனக் குற்றம் சுமத்தினாள் பெண். " உங்கம்மா எப்படி சமாதானம் செஞ்சா சமாதானம் ஆவாளோ அப்படி சமாதானம் படுத்து. " என்க, எழுந்து சமையலறைக்குள் சென்று அன்னையைப் பின்னாலிருந்து கட்டியணைத்தாள் வாசு. " ஜோஹி இனி உங்ககிட்டையும் கார்த்திப்பாட்டையும் கேக்காம எதுலையும் சேர மாட்டேன். பெரிய பெரிய முடிவ நானே எடுக்கமாட்டேன். ப்ராமிஸ். " என்க, மகளை விலக்கிவிட்டு நாற்காலியில் அமர்ந்து அமைதியாகத் தன் தட்டை நிரப்பத்...

like

Ad