முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...
சமீபத்திய இடுகைகள்

உறவு 4

  அத்தியாயம்: 4   "ம்... பேசுங்க அண்ணி." என்று குழலி ஆர்த்தியின் கையில் ஃபோனைத் திணிக்க, மெல்லிய புன்னகையுடன் அதை தன் செவிகளில் வைத்தவள்,   "ஹலோ..." என்க,   "நான் தர்மா பேசுறேன்...”   அவள், "ம்..." என்றதும்,   "எப்படி இருங்கீங்க?"   "நான் நல்லா இருக்கேன். நீங்க? உங்களத்தான் பார்க்கவே முடியல. அத்தை தான் ரொம்ப வருத்தப்பட்டாங்க. ஏன் கல்யாணத்துக்கு வரல?" என உரிமையுடன் கேள்வி கேட்டாள் ஆர்த்தி.   "சாரிங்க என்னால கல்யாணத்துக்கு வர முடியல. கொஞ்சம் இங்க வேலை இருந்தது. ஆனா என்னோட நினைப்பு முழுக்க அங்க தான் இருந்தது. அடுத்த வாரம் ஊருக்கு வர்றேன் உங்களப் பார்க்கத் தான்." என உற்சாகமாகப் பேசியவன் அவளிடம் இரண்டொரு வார்த்தைகள்‌ பேச, அவளும் சகஜமாகப் பேசினாள்.   “வெண்மா, கல்யாணத்தப்ப எடுத்த ஃபோட்டோஸ் அனுப்பி வை வெண்மா.” என்று கேட்டு வாங்கியவன் ஆர்த்தியை அதில் தான் முதல் முறை பார்த்தான்.   தன் அண்ணனின் திருமணத்தில் கலந்துக் கொள்ளாததை நினைத்து மனம் லேசாகக் கனத்தது.   சொன்னது போல் அந்த வாரம் வீட்டிற்கு ...

உறவு 3

  அத்தியாயம்: 3   திருமணம் நடந்ததற்கான எவ்வித அறிகுறியும் அங்கு இல்லை.   சிறிய கோவில் அது. அதில் பிரகாரத்தைச் சுற்றி வந்த தர்மா, கருவறையில் சந்நிதானத்தின் முன் வந்து நின்றதும், அலங்காரம் செய்து நிற்க வைக்கப்பட்ட சோளக்காட்டு பொம்மை போல் ஆர்த்தி அழைத்து வரப்பட்டு அவனின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டாள்.   அங்கு இருவரின் பெற்றோர்கள் மற்றும் ஊரில் உள்ள பெரியவர்கள் சிலரின் முன்னிலையில், கோயில் பூசாரி தீபாராதனைத் தட்டில் புது தாலியுடன் வந்தார். வந்தவர் அதை எடுத்து இறைவனுக்குக் காட்டி வணங்கி விட்டு, தர்மாவின் கரத்தில் ஒப்படைத்தார்.   வாங்கியவன், அந்தப் பொன் தாலியை சில நொடிகள் வெறித்தான். பின் தேகம் நடுங்க நின்றுக் கொண்டிருந்த ஆர்த்தியையும் பார்த்தான்.   அவன் கட்டும் முன்னரே, பூரிப்புடன் தூவிய அனைவரின் அட்சதைக்கு மத்தியில், மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு, ஆர்த்தியின் கழுத்தில் தாலியை அணிவித்து விட்டான் தர்மேந்திரன்.   தன் கழுத்தில் தொங்கிய புது மஞ்சள் கயிறு, 'இனி அதற்குச் சொந்தக்காரன் இவன் தான்.' என்றது ஆர்த்தியிடம்.   உடல் ஒரு கணம...

like

Ad