முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 25

அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை.  'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார்.  அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...

பனி 24

  அத்தியாயம்: 24 "அடியே தாமர... தாமர... எந்திரிடி. மணி எத்தனன்னு பாத்தியா. ரா முழுக்க அந்த ஃபோனு கழுதைய தூக்கமில்லாம நோண்ட வேண்டியது. பகல்ல எந்திரிக்க என்னைக் கத்த வைக்கிறது. என்ன பிள்ளையோ நீ. காலேஜ்க்கு நேரமாச்சின்னு கத்துவல்ல அப்ப பாத்துக்கிறேன்." என முதல் சில வார்த்தைகளை மட்டும் சத்தமாக பேசியவர், பின் வந்ததைச் சடைப்பாக முணுமுணுத்தார் தமிழரசி. சுருக்கமாக அரசி. ஊர் மதுரை என்பதாலோ என்னமோ அந்த வீட்டின் மீனாட்சியான அரசியின் ஆட்சி தான் நடைபெறுகிறது. காலையிலேயே வயலுக்குச் சென்று கீரை பறித்து எடுத்து வந்தவர். இன்னும் எழாமல் உறங்கும் மகளை கண்டு கத்திய படியே சமையலறைக்குள் சென்றார்‌.  "எம்மோய் பசிக்கிது. என்ன வச்சிருக்க? " என்றபடி சட்டியில் இருந்த கஞ்சியை எடுத்தான் பாண்டி. அவனின் கையைத் தட்டி விட்டார். "ம்மா…" என அலற, "காலங்காத்தால பல்லக் கூட வெளக்காம, சொத்து சட்டிய தூக்குற. கூறு கெட்ட கழுத. போய் வெளக்கிட்டு வா. " என்ற தாயைக் கண்டு கொள்ளாது வாயை மட்டும் கொப்பளித்து விட்டு தட்டை எடுத்துக் கொண்டு சோத்து பானையுடன் தரையில் அமர்ந்தான்.  "இருடா. நீச்சத்தண...

பனி 23

  அத்தியாயம்: 23 திருமணம் சொர்க்கத்தில்… நிச்சயிக்க படலாம்… நடப்பது பூமியில் அல்லவா...  பஞ்ச பூதங்கள் சாட்சியாய்... நான்கு வேதங்கள் ஓத... மூன்று முடிச்சிட்டு... இரு மனங்கள் இணைந்தே...  ஒருயிராய்த் திருமணம்…  அதுபோன்ற ஒரு திருமணம் தான் நடக்க உள்ளது. பைரவியால் நம்ப முடியவில்லை, இத்தனை விரைவாக திருமணம் நடக்க உள்ளதை. ஒரு வாரம்… ஏழு நாட்கள்… 168 மணி நேரத்தில் அத்தனையையும் சிறப்பாக ஏற்பாடு செய்ய முடியுமா என்றால், முடியும் என நிறுப்பித்திருந்தான் அவனின் மணாளன். மதுசூதனன் திருமணத்திற்குப் பெண் என்று முதலில் நேரில் பார்த்தது பைரவியைத்தான். மற்றவர்களைப் புகைபடத்தில் பார்த்தே வேண்டாம் எனத் தட்டி விட்டு விடுவான். ஆனால் பைரவியைப் புகைபடத்தில் கூடப் பார்க்காது நேரில் சந்தித்தான். அந்த ரெஸ்டாரன்ட்டில் அவசர அவசரமாக நுழைந்து, விழிகளைச் சுழல விட்டவளின் முகம் இப்போதும் நினைவில் இருக்கிறது. அது அடி மனதில் பூப் பூத்தது போன்றொரு உணர்வைத் தந்தது நிஜம்.  இரண்டாம் முறை பார்த்த போதும் அப்படித்தான். கைப் பிடியைப் பிடித்து கொண்டு தன்னை எட்டி பார்த்த மங்கையின் முகத்தில் தோன்றிய ஒளி தனக்கானத...

like

Ad