அத்தியாயம்: 5 இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன். தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக. பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான். வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது. கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள். “என்னாச்சி வெண்மா?” “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான். “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...
அத்தியாயம்: 58 மெரினா கடற்கரை. "கார்த்திக் அந்தப் பையன அவனுங்க நின்ன இடத்துலயே சைக்கிள் ஓட்டச் சொன்னாங்க. அப்றம் ஒருத்தன ரஜினி டயலாக்க விஜயகாந்த் ஸார் பேசுனா எப்படி இருக்கும்னு பேசிக் காட்ட சொன்னாங்க. பாக்கவே சிரிப்பா இருந்தது. என்னைக் கூட ஒரு அக்காளுங்க கூப்பிட்டு பத்துத் திருக்குறள் சொல்ல சொல்லிச் சொன்னாங்க. எனக்கு ரெண்டுக்கு மேல தெரியல. வச்சி ஓட்டி எடுத்துட்டாங்க. ‘நீயெல்லாம் எப்படிப் பன்னண்டாப்பு பாஸ்ஸானியோ. உனக்குத் தமிழ் பாடம் உண்டா இல்லையா’ன்னும் கேட்டு என்னைச் செம்மையாக் கேலி பண்ணாங்க தெரியுமா." எனத் தன் முதல் நாள் அனுபவத்தை ஜோஹிதா சொல்ல, அதைக் கேட்கும் மனநிலையில் தான் கார்த்திக் இல்லை. "நானும் சிந்துவும் அங்க சிலர ஃப்ரெண்டா பிடிச்சிருக்கோம். சில ஃப்ரபசர் கூட நல்லா பேசுனாங்க. நல்லா இருந்தது காலேஜ். உன்னோட ஃபஸ்ட் டே எப்படிப் போச்சி கார்த்திக்?. கார்த்திக்? " என அவனை உளுக்க, "மோசமா போச்சி. ரொம்ப மோசமா. " "என்னாச்சி? " " இன்னைக்கி நான் என்னோட சீனியர் ஒருத்தன அடிச்சிட்டேன். " " என்ன!! ஏன்?. என்னாச்சி? உன்னைக் கூப்பிட்டு ராக் பண...