முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

நேசிப்பாயா 58

அத்தியாயம்: 58 மெரினா கடற்கரை. "கார்த்திக் அந்தப் பையன அவனுங்க நின்ன இடத்துலயே சைக்கிள் ஓட்டச் சொன்னாங்க. அப்றம் ஒருத்தன ரஜினி டயலாக்க விஜயகாந்த் ஸார் பேசுனா எப்படி இருக்கும்னு பேசிக் காட்ட சொன்னாங்க. பாக்கவே சிரிப்பா இருந்தது. என்னைக் கூட ஒரு அக்காளுங்க கூப்பிட்டு பத்துத் திருக்குறள் சொல்ல சொல்லிச் சொன்னாங்க. எனக்கு ரெண்டுக்கு மேல தெரியல. வச்சி ஓட்டி எடுத்துட்டாங்க. ‘நீயெல்லாம் எப்படிப் பன்னண்டாப்பு பாஸ்ஸானியோ. உனக்குத் தமிழ் பாடம் உண்டா இல்லையா’ன்னும் கேட்டு என்னைச் செம்மையாக் கேலி பண்ணாங்க தெரியுமா." எனத் தன் முதல் நாள் அனுபவத்தை ஜோஹிதா சொல்ல, அதைக் கேட்கும் மனநிலையில் தான் கார்த்திக் இல்லை. "நானும் சிந்துவும் அங்க சிலர ஃப்ரெண்டா பிடிச்சிருக்கோம். சில ஃப்ரபசர் கூட நல்லா பேசுனாங்க. நல்லா இருந்தது காலேஜ். உன்னோட ஃபஸ்ட் டே எப்படிப் போச்சி கார்த்திக்?. கார்த்திக்? " என அவனை உளுக்க, "மோசமா போச்சி. ரொம்ப மோசமா. " "என்னாச்சி? " " இன்னைக்கி நான் என்னோட சீனியர் ஒருத்தன அடிச்சிட்டேன். " " என்ன!! ஏன்?. என்னாச்சி? உன்னைக் கூப்பிட்டு ராக் பண...

நேசிப்பாயா 57

அத்தியாயம்: 57 காலைக் கதிரவன் தன் பணியைச் சிறப்புடன் செய்ய, பொழுது புலர்ந்தது. கார்த்திக் இன்று மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் எழுந்தான். ஏனெனில் அவனுக்குச் சென்னையில் உள்ள ஒரு புகழ் பெற்ற இன்ஜினியரிங் காலேஜில் இடம் கிடைத்துள்ளது. ஒரு ரூபாய் கூடச் செலவு செய்யாது. யாரின் சிபாரிசும் இன்றி அவன் வாங்கிய மதிப்பெண்கள் அவனை அந்த இடத்தில் கொண்டு வந்து சேர்த்துள்ளது‌‌. இன்று, கல்லூரியின் முதல் நாள். அவனுக்கு மட்டுமல்ல. ஜோஹிதாவிற்கும் தான்‌. அவனைத் தினமும் பார்க்க ஏதுவாக அவனின் கல்லூரிக்கு அருகிலேயே வேறொரு கல்லூரியில் பிஏ இங்லீஸ் சேர்ந்துள்ளாள். டிரிங்... டிரிங்… " ஹேய்… ஜோஹி, குட்மார்னிங். இதோ கிளம்பிட்டேன்‌‌. பத்து நிமிஷத்துல அங்க இருக்குப்பேன்." "... " " ம்…" "..." "சரி. " "..." "ஓகே. நான் பஸ்ல வரல பைக்ல தான் வரப் போறேன். அப்சத் கூட. " என்றவன் ஃபோனை வைத்துவிட்டு தன் உடையிருக்கும் கப்போர்டை திறந்தான். மஞ்சள் அது ஜோஹிதாவின் விருப்ப நிறம். எனவே வெந்தய மஞ்சள் நிற சட்டையை எடுத்து அணிந்து அதற்கு மேச்சாக ஒரு ஃபார்மல் பேட்டை அ...

நேசிப்பாயா 56

  அத்தியாயம்: 56 "ஏய் அறிவிருக்கா உனக்கு. க்ரவுண்டுல எல்லார் முன்னாடியும் இப்படித்தா நடந்துப்பியா!" எனக் கார்த்திக் கத்த. " நான் மொத மொற உன்னைப் பாத்து பெல் அடிக்கும்போது திரும்பிருந்தேன்னா நான் ஏன் அவ்ளோ நேரம் பெல்லடிக்க போறேன். நீ ஏன் பாக்கல?" "என்ன வாய் ஓவரா பேசு மாதிரித் தெரியுது. பயம் விட்டுப் போச்சா. " "நான் ஏன் பயப்படணும்? நீ என்ன பேயா பூதமா? " "இதோ பாரு அன்னைக்கி நீ என்னைக் காப்பாத்துன. அதுக்காக நான் உனக்கு‌ நன்றி சொன்னேன். அவ்ளோ தான். நான் பேசவும் நீயா எதையாது கற்பன பண்ணிட்டு திரியாத. " "நான் தான் கற்பன பண்ணுவேன்ணு தெரியுதுல. அப்றம் ஏன் உன்னோட ரெக்கார்டு நோட்ட என்னை எழுதித் தரச் சொன்ன." "அதுக்கு… சைக்கிள்ள காத்த புடுங்கி விடுவியா. " "நான் ப்ரேக்கையே பிடுங்கிருப்பேன். பாவமாச்சேன்னு விட்டேன். ராத்திரியெல்லாம் கை வலிக்க எழுதித் தந்தா… தொர சுகமா விளையாண்டுட்டு இருப்பிங்க. அதுவும் என்னைக் கண்டுக்காம. " "அதுக்கு தான் வால்ட்டியூப்ப புடுங்கிட்டியே. அப்றம் என்ன? " "அப்ப இத நான் கீழ போட்டுடவா....

like

Ad