முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 67

அத்தியாயம்: 67 நடு வீட்டில் ஒற்றைக்காலை மடக்கி மற்றொரு காலை நீட்டி, தலை விரி கோலமாய் ஆங்காரம் கொட்டும் விழிகளால், தன் முன் இருந்த கணவனை பஸ்பமாக்கிக் கொண்டிருந்தாள் ஷீலா.  "ஷீலு அவெ மாட்டிப்பான்னு நான் எதிர் பாக்கலம்மா. நம்பு." என்றபடி நெருங்கி வர, "நீ எதிர் பாத்திருக்கணும். அந்த அகாடமிக்காரெ எதுலயும் மாட்டாம, நம்மலயும் தேடாம, திமிரா சுத்திட்டு திரியும் போதே நீ உசாராகிருக்கணும். இப்ப வந்து நம்ப சொல்ற! எப்படி நம்புறது நான் உன்ன?"  "ம்ச்‌… நான் அவன மதுசூதனன் பின்னாடி போகச் சொல்லல.‌ அவன ஸார் பாத்துக்கிறதா சொன்னாரு. இப்ப நான் அவன ஊர்வலத்துல கலவரம் பண்ணி, அந்தக் கண்ணாயிரத்த கொல பண்ணத்தான் சொன்னேன். சரியா செய்வியான்னு நினைச்சேன். போதைல மாட்டிப்பான்னு நான் நினைக்கல. "  "அவெ சரியாத்தா இருந்தான். நீ தான் தப்புக்கணக்கு போட்டுட்ட." என ஆங்காரமாக கத்த, "நான் என்ன பண்ணேன்?" என்றவனைப் பேச விடாது, "எனக்கு தெரியாது. விடிஞ்சதும் எந்தம்பி இங்க இருக்கணும். அவனுக்கு ஏதாவது ஒன்று ஆச்சி!! " என விழி உருட்டி மிரட்டிச் சொல்ல, யோசனையுடன் நின்றான் விசாகன்...

பனி 66

  அத்தியாயம்: 66 சுதந்திர இந்தியாவில் தன் கருத்துக்களை வெளிப்படையாக கூறுவதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது. இங்கு அமைதியான முறையில் போராடி தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை அடைய முடியும். நம் நாடே இது போன்ற அஹிம்சை வழியில் போராடி தானே விடுதலை பெற்றது.  தேசத் தந்தையின் கொள்கைகளை முன்னிருத்தி அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்தது அந்த ஊர்வலம். திட்டமிட்ட படி அது மெரினா கடற்கரையில் தொடங்கி ஆளுநர் மாளிகை வரை நகர்ந்து செல்ல, மது பிரவீனின் மூலம் ஊர்வலத்திற்கு தகுந்த பாதுகாப்பை வழங்கினான்.  விருப்பமே இல்லை என்றாலும் தாமரை என்ற ஒரு ஜீவனுக்காக இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டான் மது. அவனின் கையில் ஒரு பதாகையை கொடுத்து நடக்கச் சொல்ல, அதை விறிசியாக்கி வீசிய படி நடந்து வந்தான்.  அதிக மக்கள் கிடையாது தான். ஆனால் தனி தனியாக புறப்பட்ட அணிகள் வந்து சேர்க்கையிலும், ஆளுநர் மாளிகையிலும் எதாவது நடக்கலாம் என மது கணிக்க, அந்த இடத்தில் ராக்கியை நிறுத்தி. தன் கண் பார்வைக்குள் அனைவரையும் வைத்திருந்தான்‌.  தான் கணித்தது உண்மையாக இருந்தால் இந்த ஊர்வலம் நடக்க கூடாது என்பதற்காக தான் தாமரை கடத்...

like

Ad