அத்தியாயம்: 5 இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன். தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக. பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான். வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது. கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள். “என்னாச்சி வெண்மா?” “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான். “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...
அத்தியாயம்: 3 ஊட்டி... மலைகளின் இளவரசி. இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து. உடலை உறைய வைக்கும் இமயமலையின் பனி போல் இல்லாமல், இதமாய் வருடிச் சொல்லும் மெல்லிய குளிர், நம் அடிமனதை மெதுவாகத் தொட்டுச் செல்லும். சுகமாக அதே சமயம் இதமாகவும் ரசித்து அனுபவிக்கும் படி இருக்கும் உதகமண்டலத்தின் சீதோஷ சூழ்நிலை. நீலகிரி நம் தமிழ்நாட்டின் வைரக்கல் அல்லவா. சுமார் ஏழாயிரம் அடி உயரத்தில் உள்ளது. எண்ணிலடங்காத உயிர்களின் உறைவிடம். கண்டு பிடிக்கப் படாத மூலிகைச் செடிகளின் பாதுகாவலன். யாரின் உதவியுமின்றி இயற்கை எழுப்பிய மதில் அது. அங்குத் தான் இருக்கிறோம் நாம். தொட்டபெட்டா... இயற்கை அழகை முழுமையாக ரசிக்கச் சரியான இடம். தமிழகத்தின் உயர்ந்த சிகரம் அது. நீலகிரியின் மூடுபனி நிறைந்த அந்தப் பச்சை மலை காடுகளின் நிகரற்ற அழகை ஒரு பறவைபோல் மேலிருந்து ரசிக்கத் தொட்டபொட்டா சிறந்த இடம். அதில் ஓரிடத்தில் கர்நாடக எல்லை ஆரம்பம் என எழுதி இருந்தது. "ஹேய் பவதா உன்ன ஒரே நொடில நம்ம பக்கத்து ஸ்டேட்டுக்கு கூட்டிட்டு போகவா. ம்... வா." எனத் தன் மனைவியின் கரம்பற்றி இழுக்க, பொம்மைபோல் அவன் உடன் சென்றாள் ...