அத்தியாயம்: 5 இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன். தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக. பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான். வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது. கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள். “என்னாச்சி வெண்மா?” “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான். “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...
அத்தியாயம்: 25 தன்னை விடச் சிறியவளாகினும்… தங்கத்தை விட உயர்ந்தவளாக… அண்ணனின் உள்ளத்தில்... வாழ்ந்து கொண்டிருப்பவள் அவள்... ஒரு ஆண் அறியும்… இரண்டாவது அன்னை... உடன் பிறந்தவள்... மனமானது சற்று லேசாக இருந்தது. தன் தங்கையின் கல்லறையைக் காண்கையில். ஏனோ இதற்குக் காரணமானவர்களை நெருங்கி விட்டதை போல் ஒரு உணர்வு. தங்கையை இழந்ததற்கு பழி வாங்க தயாராக இரு என்றது மனம். எந்த வழியும் கிடைக்காத போதும், கிடைத்துவிட்டதை போல் நிறைந்து போனது மனம். ஏன் என்று தான் புரியவில்லை. தங்கையின் கல்லறையில் இருந்த மலர்களில் வந்தமர்ந்த சில பட்டாம்பூச்சிகளை கண்டவன் நிறைந்த புன்னகையுடன் வீடு திரும்ப, ஒரு இனிப்புக் கடை கண்ணில் பட்டது. நேற்று பவதாவிடம் சண்டையிட்டு கடைசி ஸ்பூன் அல்லவாவை அவளுக்குத் தராது உண்டதால் கோபமாக முகம் திருப்பிச் சென்றது நினைவு வர, அந்தக் கடையில் குலோப்ஜாமுனை வாங்கிக் கொடுத்துச் சமாதானம் செய்ய நினைத்தான். வீடு வந்தவன் ஹாலில் அமர்ந்திருந்தவளிடம் தர. அவளோ. "எனக்கு வேண்டாம். நா கேக்கும்போது தந்திங்களா. இல்லல்ல. இப்ப எனக்கு வேண்டாம். " என எழுந்து செல்ல, "என்ன ACP. உன்னோட பாப்பா கோயிச்...