முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 14

  அத்தியாயம்: 14 முதலீட்டாளர்கள் ஈர்ப்பு மாநாடு. அதாவது எங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள். உங்களுக்கான வசதி வாய்ப்புகளை நாங்கள் ஏற்படுத்தி தருகிறோம் என்று முதலீட்டாளர்கள் அதாவது உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு விட்டுத்துள்ளார் நம் முதலமைச்சர். அந்த மாநாட்டில் பங்கு கொள்ள எனப் பல பெரும் நிறுவன உரிமையாளர்கள் தமிழ்நாடு வந்திறங்க உள்ளனர். அவர்களில் சிலருக்கானப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் பொறுப்பு சிதம்பரம் நடத்தும் செக்யூரிட்டி ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதற்கு முன் இது போல் நடந்த ஒரு மாநாட்டில் பங்கு பெற்ற வந்த ஒரு முதலீட்டாளர், ‘தன் தொழில் ரகசியங்களை யாரோ திருடி விட்டனர்‌‌. தனக்குக் கோடிக்கணக்கில் நட்டம் வரப் போகிறது’ என்று கதறி, அதற்கு மதுவின் கவனக்குறைவு தான் காரணம் எனக் குற்றம் சுமத்தினார். அதை விசாரிக்க போய்த்தான் பைரவிக்கும் மதுவிற்கும் பெரும் சண்டை மூண்டது.  இப்போது குற்றம் சுமத்திய அதே‌ மனிதன், இம்முறையும் மதுவின் செக்யூரிட்டி தான் வேண்டும் என்று கேட்க, சிதம்பரம் அவனிடம் கவனமாக இருக்கும் படி அறிவுரை வழங்கிக் கொண்டு இருந்தார்.  "நெக்ஸ்...

எனை சுடும் பனி

 



கல்யாணத்துக்கு கண்டிஷன் வச்சி கட்டிக்கிட்ட ஹீரோ... ஓகே ஓகேன்னு அவன கல்யாணம் பண்ணிட்டு கண்டிஷனா! அப்படின்னா! ங்கிற மாதிரி அதை ஃபாலோவே பண்ணாத நாயகி.. 

அவங்க ரெண்டுக்கும் இடைல நடக்குற டாம் அண்ட் ஜெர்ரி காதல் கதை தான் "எனை சுடும் பனி "

கதை நிச்சயம் உங்களைக் கவரும்... 














கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நேசிப்பாயா

அத்தியாயம்: 1 இருபதாம் நூற்றாண்டின் கடைசி சில வருடங்கள். சென்னை மெரினா கடற்கரை. ஓயாது அடித்துச் செல்லும் அலைகளுக்குக் கரை என்றும் சொந்தமாகியதே இல்லை. வரலாம்... சில நொடிகள் தன்னை தீண்டலாம். பின் திரும்பியும் பார்க்காது சென்று விட வேண்டும். நிரந்தரமாக ஒட்டி உறவாடிக் கவிபேசாது அந்தக் கரையுடனான உறவு என்றும் இருக்கும். அதுபோல் தான் காதலும். " ம்ச்... வந்ததுல இருந்து அழுதுக்கிட்டே இருக்க. என்ன நடந்ததுன்னு சொன்னாத்தான தெரியும். " என்றான் அந்த இளைஞன். பள்ளி மாணவன்போல் பென்சில் பாடி. ஆனால் கல்லூரி மாணவன். " என்னன்னு நா உனக்கு எத்தன தடவ தா சொல்றது. உனக்குத் தா புரிய மாட்டேங்கிது. " பெண். அவளும் கல்லூரி மாணவி தான். இருவரும் காதலர்கள். காதலர்களுக்குள் ஊடல் போலும். "பொண்ணு தான பாத்திருக்காங்க. இதுக்கு எதுக்கு அழற நீ. போய்ப் பிடிக்கலன்னு சொல்லிடு. அவ்ளோ தா. " என்றான் கூலாக. " ம்… சரி. சொல்லிடுறேன். ஆனா அவங்க காரணம் கேப்பாங்களே?. என்ன பதில் சொல்ல?. உன்ன காதலிக்கிறேன்னு சொல்லவா!. அப்படி சொன்னா அவங்க ஏத்துப்பாங்களா என்ன?. நீ இன்னும் காலேஜ் கூட முடிக்கல!. நமக்குன்னு உர...