நின்னை - 67 கையில் ஒரு வித வலி உணர்ந்து விழிப்பு தட்டியது சாத்விக்கு. இமை பிரித்தாள். வாமன் அவள் கையை தன் கைக்குள் வைத்த மாதிரி ஒட்டிப் படுத்திருந்தான். இரத்த ஓட்டம் குன்றிய கையின் திமிர்த்த உணர்வை தாங்கி தன்னை மறந்து அவனை பார்த்தாள். வருத்தமுற்றிருந்த இரவுகளில் இப்படி தான் அவள் கை பற்றி படுப்பான். உடல் தேறியதும் நேராக படுத்து வயிற்றில் ஒன்றும் பக்கத்தில் ஒன்றுமாக தன் கரங்களை முதல் மாதிரியே வைத்துக் கொண்டான். திரும்பவும் பற்றிக் கொண்டு உறங்குகிறான்.. இதை எப்படி எடுப்பது? மன வருத்தமா, உடல் வருத்தமா? இரவு நடந்தவைகளை மூளை அவசரமாக படம் ஓட்ட, தெளிந்திருந்த மனம் சிந்தித்தது. சீராக மூச்சு விடும் அவன் சிவந்த நாசி உதடுகளை பார்த்தாள். உறங்கும் போது மாத்திரம் எங்கனம் இவன் வதனம் குழந்தை போல் ஆகிறது?! அவள் திறந்து போட்ட டீ ஷர்ட், முட்டி அளவு ஷார்ட்ஸில் பக்கவாட்டில் சரிந்து அவள் கையை தன் கைக்குள் அடக்கி சலனமில்லாமல் கிடப்பவனை வாரிக் கொள்ள வேண்டும் போல ஆசை தான். 'நீங்க இப்டி இல்ல.. நோர்மலா இல்ல' சாட்டிய குற்றம் காதில் கேட்க, நான் இப்படி இல்லைத் தான்! நீ தான் என்னை இப்படி மாற்றிவிட்டா...
கல்யாணத்துக்கு கண்டிஷன் வச்சி கட்டிக்கிட்ட ஹீரோ... ஓகே ஓகேன்னு அவன கல்யாணம் பண்ணிட்டு கண்டிஷனா! அப்படின்னா! ங்கிற மாதிரி அதை ஃபாலோவே பண்ணாத நாயகி..
அவங்க ரெண்டுக்கும் இடைல நடக்குற டாம் அண்ட் ஜெர்ரி காதல் கதை தான் "எனை சுடும் பனி "
கதை நிச்சயம் உங்களைக் கவரும்...

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..