முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 67

 நின்னை - 67 கையில் ஒரு வித வலி உணர்ந்து விழிப்பு தட்டியது சாத்விக்கு. இமை பிரித்தாள். வாமன் அவள் கையை தன் கைக்குள் வைத்த மாதிரி ஒட்டிப் படுத்திருந்தான். இரத்த ஓட்டம் குன்றிய கையின் திமிர்த்த உணர்வை தாங்கி தன்னை மறந்து அவனை பார்த்தாள். வருத்தமுற்றிருந்த இரவுகளில் இப்படி தான் அவள் கை பற்றி படுப்பான். உடல் தேறியதும் நேராக படுத்து வயிற்றில் ஒன்றும் பக்கத்தில் ஒன்றுமாக தன் கரங்களை முதல் மாதிரியே வைத்துக் கொண்டான். திரும்பவும் பற்றிக் கொண்டு உறங்குகிறான்.. இதை எப்படி எடுப்பது? மன வருத்தமா, உடல் வருத்தமா? இரவு நடந்தவைகளை மூளை அவசரமாக படம் ஓட்ட, தெளிந்திருந்த மனம் சிந்தித்தது.  சீராக மூச்சு விடும் அவன் சிவந்த நாசி உதடுகளை பார்த்தாள். உறங்கும் போது மாத்திரம் எங்கனம் இவன் வதனம் குழந்தை போல் ஆகிறது?!  அவள் திறந்து போட்ட டீ ஷர்ட், முட்டி அளவு ஷார்ட்ஸில் பக்கவாட்டில் சரிந்து அவள் கையை தன் கைக்குள் அடக்கி சலனமில்லாமல் கிடப்பவனை வாரிக் கொள்ள வேண்டும் போல ஆசை தான். 'நீங்க இப்டி இல்ல.. நோர்மலா இல்ல' சாட்டிய குற்றம் காதில் கேட்க, நான் இப்படி இல்லைத் தான்! நீ தான் என்னை இப்படி மாற்றிவிட்டா...

எனை சுடும் பனி

 



கல்யாணத்துக்கு கண்டிஷன் வச்சி கட்டிக்கிட்ட ஹீரோ... ஓகே ஓகேன்னு அவன கல்யாணம் பண்ணிட்டு கண்டிஷனா! அப்படின்னா! ங்கிற மாதிரி அதை ஃபாலோவே பண்ணாத நாயகி.. 

அவங்க ரெண்டுக்கும் இடைல நடக்குற டாம் அண்ட் ஜெர்ரி காதல் கதை தான் "எனை சுடும் பனி "

கதை நிச்சயம் உங்களைக் கவரும்... 
























































கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...