அத்தியாயம்: 14 முதலீட்டாளர்கள் ஈர்ப்பு மாநாடு. அதாவது எங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள். உங்களுக்கான வசதி வாய்ப்புகளை நாங்கள் ஏற்படுத்தி தருகிறோம் என்று முதலீட்டாளர்கள் அதாவது உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு விட்டுத்துள்ளார் நம் முதலமைச்சர். அந்த மாநாட்டில் பங்கு கொள்ள எனப் பல பெரும் நிறுவன உரிமையாளர்கள் தமிழ்நாடு வந்திறங்க உள்ளனர். அவர்களில் சிலருக்கானப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் பொறுப்பு சிதம்பரம் நடத்தும் செக்யூரிட்டி ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு முன் இது போல் நடந்த ஒரு மாநாட்டில் பங்கு பெற்ற வந்த ஒரு முதலீட்டாளர், ‘தன் தொழில் ரகசியங்களை யாரோ திருடி விட்டனர். தனக்குக் கோடிக்கணக்கில் நட்டம் வரப் போகிறது’ என்று கதறி, அதற்கு மதுவின் கவனக்குறைவு தான் காரணம் எனக் குற்றம் சுமத்தினார். அதை விசாரிக்க போய்த்தான் பைரவிக்கும் மதுவிற்கும் பெரும் சண்டை மூண்டது. இப்போது குற்றம் சுமத்திய அதே மனிதன், இம்முறையும் மதுவின் செக்யூரிட்டி தான் வேண்டும் என்று கேட்க, சிதம்பரம் அவனிடம் கவனமாக இருக்கும் படி அறிவுரை வழங்கிக் கொண்டு இருந்தார். "நெக்ஸ்...
கல்யாணத்துக்கு கண்டிஷன் வச்சி கட்டிக்கிட்ட ஹீரோ... ஓகே ஓகேன்னு அவன கல்யாணம் பண்ணிட்டு கண்டிஷனா! அப்படின்னா! ங்கிற மாதிரி அதை ஃபாலோவே பண்ணாத நாயகி..
அவங்க ரெண்டுக்கும் இடைல நடக்குற டாம் அண்ட் ஜெர்ரி காதல் கதை தான் "எனை சுடும் பனி "
கதை நிச்சயம் உங்களைக் கவரும்...

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..