அத்தியாயம்: 65
"இப்ப நம்புறீங்களா! நான் பொய் சொல்லலன்னு. அவன நான் விஜியோட அண்ணே பொண்ணு பர்த்டே பார்ட்டில பாத்திருக்கேன். அவெ விசாகனோட அடியாளு. விஜியோட அண்ணே கொஞ்சம் சரியில்லாத ஆளு. அவருக்கு ஏகப்பட்ட கெட்ட பழக்கம் இருக்குன்னு விஜி சொல்லிருக்கா. அப்ப அதப் பத்தி எனக்கு க்ளியரா தெரியாது.
விசாகன பத்தி இப்ப நான் விசாரிச்சப்ப கட்டப்பஞ்சாத்து, அடிதடி, கூலிப்படைன்னு ஏகப்பட்டது வச்சிருக்குறதாவும், பெரிய பெரிய அரசியல்வாதிங்க பிஸ்னஸ் மேன்னு செல்வாக்கு இருக்குற நிறைய பேரோட சொத்த பாதுகாக்குற பிணாமியா இருக்குறதாவும் கேள்வி பட்டேன். ஏன் நீங்க இன்னைக்கி பாதுகாப்பு வந்திருக்குற மிஸ்டர் சிராஜ் குப்தா. அவரோட சென்னை சிட்டி பிணாமியே விசாகன் தான். சிராஜ்ஜோட வலது கைன்னு சொல்லலாம். " என அன்றைய பிறந்தாள் விழாவில் எடுத்த புகைப்படங்கள் ஒவ்வொன்றாக காட்ட, மதுவிற்கு மாலையில் வந்திறங்கிய மூவரும் யார் என்று இப்போது புலப்பட்டது.
"இது தான் விஜியோட அண்ணே. விசாகன். இது அவரோட வைஃப் ஷீலா. இது ஷீலாவோட தம்பி. செந்தில். " என வரிசையாக அன்று எடுத்த புகைப்படங்களைக் காட்ட,
தன்னைச் சிக்க வைக்க தன்னைச் சுற்றி காய்களை நகர்த்தியது விசாகன் தான் என உறுதியாக தெரிய வந்தது. ஆனால் ஏன் என்று யோசிக்கும் போது சிராஜ்ஜுடன் உண்டான மோதல் நினைவு வந்தது. சிராஜ்ஜின் தொழில் ரகசியங்கள் திருடு போனதற்கு தானும் ஒரு காரணம் என்பதால் சிராஜ் விசாகனை ஏவி விட்டு தன்னைப் பழி வாங்க பார்க்கிறான் என்று மூளை சொல்லியது.
கூடவே வேறு ஒன்றையும் சொல்லியது. பைரவி காட்டிய புகைப்படத்தில் இருந்த ஒருவனை தாமரை கடத்தப்பட்ட அன்று பார்த்தாகவும், மற்றொருவனை இரு தினங்களுக்கு முன் பள்ளியில் வைத்து கடத்த முயன்ற போது பார்த்தாகவும் சொல்லியது.
அப்படியெனில் விசாகன் தான் தாமரையை கடத்தப் பார்த்தது. ஆனால் ஏன் தாமரையைக் கடத்த வேண்டும். ஒருவேளை கண்ணாயிரம் தன் நிறுவனத்தில் மீது போட்ட வழக்கை வாப்பஸ் வாங்க வைக்க விசாகனை சிராஜ் ஏவி விட்டிருக்கலாம். அப்படிக் கடத்தி இருந்தால் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே கடத்தி இருக்கலாமே. அவனின் பக்கம் தீர்ப்பு வழங்கும் தருவாயில் உள்ள வழக்கிற்காக கடத்த வேண்டும்.
இல்லை அந்த விளையாட்டு ஆசிரியர் ஆர்பாட்டத்தைப் பற்றி எதோ கூறினானே! அப்படி எனில் சுடர் மரணத்திற்கும் விசாகனுக்கும் நேரடி தொடர்பு இருக்க வேண்டும். இல்லயேல் சிராஜ்ஜிற்காக விசாகன் இறங்கி வேலை பார்த்திருக்க வேண்டும்.’ என மதுவின் மனம் சொல்ல. கடைசி இரு வார்த்தைகளை சத்தமாக சொல்லி விட்டான்.
"என்ன மாமா சொன்னிங்க? சுடர் அக்கா கொலைல யாரு இறங்கி வேலை பாத்திருக்கா?" எனப் பைரவி கேட்க,
"ம்ச்… எதுவும் இல்ல. நீ சுடர பத்தி யோசிக்காம கிளம்பு. " என விரட்டினான் அவன்.
அவனுக்குச் சுடரின் கொலை வழக்கு தேவையே இல்லை. சொல்ல போனால் அவளால் தான் தன் குடும்ப வாழ்க்கை சிதைந்தது. அப்படி இருக்க அவளைக் கொன்றது யார் என நான் ஏன் துப்புதுலக்க வேண்டும். தன்னைச் சீண்டி விளையாடிய சிராஜ்ஜையும் விசாகனையும் கண்டிப்பாக எதாவது செய்தாக வேண்டும். அது தான் அவனின் முதன்மை பணி. அதனால் சுடர் கொலை தனக்கு தேவையற்றது என ஒதுக்க,
பைரவி, 'என்ன சொன்னிங்க மாமா? என்ன சொன்னிங்க?' எனக் கேட்டு கேட்டு நச்சரிக்க, அவளின் கரம் பற்றி இழுத்து சென்றான் மது.
அதைக் கண்ட தீஷித் வேகமாக வந்து மதுவை தடுத்து, " what's wrong with you man. leave her hand. " எனக் கோபமாக தீஷித் மதுவின் எதிரில் நின்றான்.
'டேய்… உனக்கு என்னடா வேணும். அதா புருஷனும் பொண்டிட்டியுமா பேசிட்டு இருக்கோமே! அப்றம் எதுக்கு ஊடால கொண்டு வந்து உன் மூக்க நுழைக்கிற. நான் அவள இழுத்திட்டு போனா உனக்கு எங்கடா வலிக்கிது! ' இது மதுவின் மைண்ட் வாய்ஸ். பட் அதை வெளியில் சொல்லாது விரைப்பாய் நிற்க,
"இது எங்க பர்ஷ்னல். சோ, better you stay away. " எனக் காட்டமாக பற்களைக் கட்டித்தபடி சொல்ல, மதுவின் காதிற்கு அருகில் சென்ற தீஷித்
"எப்ப பெட் ரூம விட்டு வெளில சண்ட போட ஆரம்பிச்சிங்களோ அப்பவே உங்க ரெண்டு பேருக்கும் இடைல பர்ஷ்னல்ன்னு ஒன்னும்… கிடையாவே கிடையாது. " என மெல்லிய குரலில் சொல்லிக் கடுப்பேற்றியவன்,
"அண்ட்… பைரவி என்னோட கெஸ்ட். பெஸ்ட் ஃப்ரெண்ட். ஒரு செக்யூரிட்டி பாய் என்னோட ஃப்ரெண்டு கிட்ட அரகெண்டா! இன்டீசன்ட்டா பிகேவ் பண்றத நான் அலோ பண்ண மாட்டேன். சோ, leave her hand and say sorry to her. " என தீஷித் அழுத்தமாக சொல்ல, தீஷித்தின் கோர்ட் காலர் மதுவின் கைக்குள் அடைக்கப்பட்டது.
'எது மன்னிப்பு கேக்கணுமா! அதுவும் நீ சொல்லி இவ கிட்ட!' என்பது போல் பைரவியை ஒரு பார்வை பார்த்தவன்… முடியாது என்பது போல் இறுக்கமாக இருக்க, இருவரும் ஒருவர் சட்டைக்காலரை ஒருவர் பிடித்தபடி நின்றிருந்தனர்.
பைரவி தான், "ப்ளீஸ். விடுங்க ரெண்டு பேரும். மாமா… ப்ளிஸ்… எல்லாரும் நம்மல பாக்குறாங்க. கொஞ்ச மேர்னஸ்ஸோட நடந்துக்கங்க. தீஷித் ப்ளிஸ்…" என விலக்கி விட நினைத்து இருவருக்கும் இடையே போராடினாள். தீஷித் பைரவி சொன்னதும் மதுவின் மேலிருந்து கையை எடுத்து விட்டான்.
ஆனால் மது மட்டும் கோபமாகவே தீஷித்தை பிடித்தபடி நின்றான். பைரவி அவனிடம் கெஞ்ச, மது அவனை லேசான குலுக்கலுடன் பிடித்து தள்ளி விட்டான். தீஷித் பின்னால் நின்றிருந்த பைரவியின் மீது மோதி நின்றான். பாவம் பைரவி தான் கீழே விழுந்து விட்டாள்.
விழுந்தவள் தொடர்ந்து தும்மவும் தொடங்கினாள்.
"பையூ வாட்ஸ் ஹப்பென்." எனப் பதறி போய் தூக்கியது தீஷித்தை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.
'அவளுக்கு கையும் காலும் நல்லாத்தான இருக்கு. கீழ விழுந்தா எந்திரிக்க தெரியாதா என்ன! இவெ ஏன் இவ்ளோ சீன் போடுறான்!' மதுவின் மைண்ட் வாய்ஸ்.
தொடந்து தும்மியவள் தீஷித்தின் அருகில் சென்று அவனின் சட்டை காலரை முகர்ந்து பார்த்து, "body spray யூஸ் பண்ணிருக்கிங்களா?" எனக் கேட்க, அதைக் கண்ட மதுவிற்கு ஆத்திரம் தான் வந்தது.
'அவெ என்ன யூஸ் பண்ணா உனக்கு என்ன? உனக்கு தான் சென்ட் ஸ்மெல்லே சேராதே. அவெ போட்டிருக்காங்கிறத மோந்து பாத்து தான் தெரிஞ்சிக்கணுமா!' எனப் பொருமியபடி நின்றவன், அருகில் இருந்த அலங்கார மலரைப் பறித்து தன் கைக்குட்டையில் வைத்து அவளின் மூக்கில் அழுத்தினான்.
முகர்ந்து பார்த்தவளின் தும்மல் நின்றது. பின் கரத்தை பிடித்து இழுத்து சென்று ஹோட்டலின் வாயிலை அடைய. தீஷித் உடை மாற்றி விட்டு வந்தான், பைரவியை ட்ராப் செய்ய.
'டேய் நீ சும்மாவே இருக்க மாட்டியா!'
"எப்படி வந்த? உன்னோட சாப்பர்லயா!" என மது கேட்க வேண்டியதை தீஷித் கேட்டுக் கொண்டு நிற்க,
"பாண்டி அண்ணா வருவாரு. கால் பண்ண சொன்னாரு. பண்ணிட்டேன். அஞ்சி நிமிஷம் தான். நீங்க போங்க. உங்களுக்கு ஏன் சிரமம்." எனத் தீஷித்தின் உதவியை மறுக்க, அது மதுவிற்கு ஆனந்தமாக இருந்தது.
"அதா ஆள் வர்றதா சொல்றாங்களே உங்க ஃப்ரெண்டு. விட்டுட்டு போக வேண்டியது தான. இன்னும் ஏன் நிக்கணும், உதவிக்கரம் நீட்டிட்டு." மது முணுமுணுக்க. அவனைத் திரும்பியும் பார்க்காதவன்,
" கம்… நான் ட்ராப் பண்றேன்.” என்று அவளின் கரம் பற்றி நடந்த தீஷித்தைப் பார்க்கையில் மதுவிற்கு முள் மேல் நிற்பது போன்று இருந்தது. வேகமாக பார்ட்டி ஹாலிற்கு வந்தவன்,
" அவளுக்கு எப்படி தீஷிதன் ஃப்ரெண்டான்னா? எப்ப இருந்து அவெ பழக்கம்?" எனக் காட்டமாக ராக்கியைப் பார்த்து கேட்க,
"என்னைக் கேட்டா?"
"வேற யார கேக்கணுங்கிற!" என்றவனிடம் விளையாடாது அனைத்தையும் கூறினான்.
"சாருக்கு பொருத்தமா இருப்பான்னு சொன்னா. மத்தபடி வேற எதுவும் கிடையாது மச்சான். நம்பு. " என்றவனிடம் எதுவும் பேசாது சென்று விட, மதுவின் மனம் அவனுடன் பேசத் தொடங்கியது.
'இல்லை நிச்சயம் தோழியாக மட்டும் தீஷித் அவளைப் பார்க்கவில்லை. அதற்கு மேலும் உள்ளது. ' என்றது ஒரு மனம்.
'இருந்தா உனக்கு என்ன? நீ தான் அவள வேண்டாம்னு டைவர்ஸ் பண்ணிட்டேல. அப்றம் அவளுக்குன்னு ஒரு லைஃப்ப உருவாக்கிக்கிறதுல என்ன தப்பு இருக்கு. உன்ன நினைச்சிட்டேவா கடைசி வர வாழணும் எதிர்பாக்குற. ' என்றது மற்றொரு மனம்.
'இல்ல தான். ஆனால் எங்களுக்குள்ள டைவர்ஸ் ஆகி சில மாதங்கள் தானே ஆகிறது. அதற்குள்…”
'எதுக்குள்ள இருந்தா என்ன! நீ அவள வேண்டாம்னு ரிஜக்ட் பண்ணிட்ட. அவ்ளோ தான். இனி அவளப் பத்தி யோசிக்காத. வந்த வேலய பாரு. அந்த சிராஜ்ஜும் விசாகனும் உன்னத்தா பாத்து ஏதோ சொல்லிட்டு இருக்கானுங்க. என்னன்னு கண்டு பிடி.' என மனம் அவனை வேறு புறம் திருப்பி விட்டாலும், பைரவி தீஷித் உறவு அவனுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதே உண்மை.
மதுவின் மனம் சரியாகத்தான் சொல்லியிருக்கிறது. சிராஜ்ஜும் விசாகனும் மதுவைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தானர். கூடவே தீஷித்தையும் தான்.
ஏனெனில் இத்தனை நேரம் இருவரும் எதிரும் புதிருமாக சட்டையைப் பிடித்துக் கொண்டு சண்டைக்கு நின்றது. தூர இருந்து பார்த்த சிராஜ்ஜின் கண்களுக்கு நண்பர் இருவரும் கட்டி பிடித்து நட்பு பாராட்டுவது போல் தெரிந்தது.
ஏற்கனவே திருடு போன தன் வியாபாரத் தந்திரங்கள் தீஷித்திடம் உள்ளதை அறிந்தவன், மது தான் அதை அவனிடம் ஒப்படைத்திருப்பானோ என்று 70% சந்தேகம் கொண்டிருந்த நிலையில். இருவரின் நட்பான பேச்சும் செயலும், 100% உறுதி செய்தது.
தீஷித் கேட்க. மது எடுத்துக் கொடுத்துள்ளான் என்ற முடிவுக்கு வந்து விட்டான்.
"இவனுங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னையும் என் சாம்ராஜ்யத்தையும் அளிக்க திட்டம் போட்டுட்டு இருக்கானுங்க." என விழிகள் எரிய மதுவை பார்த்தவனின் கண்களில் மேற்கொண்டு பெட்ரோலை ஊற்றுயது போல் இருந்த விசாகன் சொன்ன செய்தி.
"அந்த கண்ணாயிரம் பொண்ண கடத்த விடாம அன்னைக்கி காப்பாத்துனதும் இவெந்தா. ஜிம் பாய். ஸ்கூல்ல காப்பாத்துனதும் இவெந்தா. " என்க, 100 அல்ல 200% இருவரும் கூட்டு சதி செய்து தன்னைத் தீர்த்துக்கட்ட பார்க்கின்றனர் என்ற முடிவுக்கே வந்துவிட்டான். நம் ஹீரோக்களுக்கும் இருவருக்கும் அரசனூர் வழக்கிற்கும் என உறவு உள்ளது என்பதை விசாரிக்கச் சொல்லி விட்டு தீவிர சிந்தனையுடனேயே அன்றிரவு சென்னையை விட்டு பறந்து சென்றான்.
அவனுக்கு தெரியாத ஒன்று அவன் எதிரியாய் நினைத்து நோக்கி வீசும் அம்புகளைப் படிக்கட்டுகளாக மாற்றி நம் ஹீரோக்கள் அவனை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருக்கின்றனர் என்று. அதற்கு முதல் படியாய் அமைந்தது அந்த போராட்டத்தை நிறுத்த அனுப்பிய ஆள்.
தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி
பனி 64
கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..