அத்தியாயம்: 21 ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள் அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான். எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான். வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது… முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...
அத்தியாயம்: 89 பேசுவதற்காக காத்திருப்பதும்… பேசும் போது சண்டையிடுவதும்… சண்டை போடவே பேசுவதும்… சண்டை போட்டாவது பேசுவோமே… என்பதும் அன்பின் உச்சகட்டம். தடக் தடக் என்ற சத்தம் கணவனின் வருகையை சொல்ல… அவன் சாவி கொண்டு திறக்கும் முன் பைரவி வேகமாக திறந்து விட்டாள். அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லாது உள்ளே சென்று வழக்கம் போல் குளியலறைக்குள் புகுந்தான். "துண்டு மாமா. " எனக் கதவை தள்ளியவள் உள்ளிருந்து மதுவின் கடுகடுத்த குரல் கேட்கவும் ஓடி விட்டாள். டைனிங் டேபிளில் உணவை எடுத்து வைத்து விட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்க, அவன் சிங்கிஹ் பெட்டைக் கையில் தூக்கிக் கொண்டு வந்து படுக்கையை ஹாலில் விரித்து படுத்துக் கொண்டான். இரு நாட்களாக ஹால் தான் பெட் ரூம் அவனுக்கு. மனைவியுடன் பேச மாட்டானாம். "சாப்பிடலயா. " "வேண்டாம். " என்றவன் போர்வைக்குள் சரணடைய, 'இவன இப்படியே விட்டா தூங்கிடுவான். கூடாது. ' என டிவியை ஆன் செய்து சத்தமாக வைத்தாள் பைரவி. "ம்ச்... நான் படுத்திருக்குறது உங்கண்ணு தெரியலயா!" "நல்லாவே தெரியுது. இது ஹால், பெட் ...