அத்தியாயம்: 5 இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன். தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக. பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான். வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது. கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள். “என்னாச்சி வெண்மா?” “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான். “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...
அத்தியாயம்: 89 பேசுவதற்காக காத்திருப்பதும்… பேசும் போது சண்டையிடுவதும்… சண்டை போடவே பேசுவதும்… சண்டை போட்டாவது பேசுவோமே… என்பதும் அன்பின் உச்சகட்டம். தடக் தடக் என்ற சத்தம் கணவனின் வருகையை சொல்ல… அவன் சாவி கொண்டு திறக்கும் முன் பைரவி வேகமாக திறந்து விட்டாள். அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லாது உள்ளே சென்று வழக்கம் போல் குளியலறைக்குள் புகுந்தான். "துண்டு மாமா. " எனக் கதவை தள்ளியவள் உள்ளிருந்து மதுவின் கடுகடுத்த குரல் கேட்கவும் ஓடி விட்டாள். டைனிங் டேபிளில் உணவை எடுத்து வைத்து விட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்க, அவன் சிங்கிஹ் பெட்டைக் கையில் தூக்கிக் கொண்டு வந்து படுக்கையை ஹாலில் விரித்து படுத்துக் கொண்டான். இரு நாட்களாக ஹால் தான் பெட் ரூம் அவனுக்கு. மனைவியுடன் பேச மாட்டானாம். "சாப்பிடலயா. " "வேண்டாம். " என்றவன் போர்வைக்குள் சரணடைய, 'இவன இப்படியே விட்டா தூங்கிடுவான். கூடாது. ' என டிவியை ஆன் செய்து சத்தமாக வைத்தாள் பைரவி. "ம்ச்... நான் படுத்திருக்குறது உங்கண்ணு தெரியலயா!" "நல்லாவே தெரியுது. இது ஹால், பெட் ...