முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறவு 21

  அத்தியாயம்: 21   ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள்‌   அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான்.   எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான்.   வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது…   முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...

உறவு 17

  அத்தியாயம்: 17   நொடியில் நெஞ்சுக் கூட்டை நிரப்பி, உடனே காலி செய்யும் காற்று ஜனித்திருப்பதற்கானப் பிராணவாயுவை உடலெங்கும் தந்து உயிருடன் கலக்கச் செய்வதைப் போல், ஆர்த்தி தர்மாவின் உயிருடன் இணையத் தொடங்கியிருந்தாள்.   நட்பு என்றவனே அந்த எல்லைக்குள் கட்டுப்பட்டு இருக்க இயலாது, தன் ஆன்மா உணர்ந்த நேசத்தை, உடலும் உணர வேண்டினான். அவளின் மெய் அன்பு வேண்டி அவனின் உள்மனம், கதறும் கதறலை வாய்விட்டுச் சொல்ல முடியாது பார்வையிலேயே வெளிக்காட்டிக் கொண்டிருந்தான் தர்மா.   ஆனால் அதை எதையும் உணரும் நிலையில் தான் ஆர்த்தி இல்லை. அவளின் பிள்ளை மனம் அவனின் பார்வையின் பொருளை வித்தியாசப்படுத்திப் பார்க்கத் தெரியாது கடந்துச் சென்றது. தன்னை அரவணைத்து ஆறுதல் தர ஒரு தாய் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அவன் காட்டிய எதிர்வினைகளை அழகாய் உள்வாங்கிக் கொண்டவளால், அதன் அர்த்தங்களை ஆராயத் தெரியவில்லை.   அல்லது ஆராய்ந்தால் அவனை இழந்து விடுவோமோ என்ற பயமாகக் கூட இருக்கலாம். யாருக்குத் தெரியும்.   "அது... எனக்குத் தனியாத் தூங்க பயமா இருக்கு. நேத்து மாதிரியே இன்னைக்கும் நான்... உங...

உறவு 16

    அத்தியாயம்: 16   மனத்தின் எங்கோ ஓர் ஓரத்தில் அவனின் மனைவிக்கான ஆசைகள் என்று ஒதுக்கிய இடத்தில் வெளிச்சம் படரத் தொடங்கியது போல் இருந்தது.   பெரிதானது கிடையாது அவனின் மனைவிக்கான ஆசைகள். தனக்கு வரவிருக்கும் மனைவி தன்னுடனும், தன் குடும்பத்துடன் ஒன்றிப் போக வேண்டும் என்பதே அவனின் அதிகபட்ச ஆசைகள்.   அந்த வீட்டு மருமகளாக ஆர்த்தி வளைய வந்த நாள்களைக் கண்டவன், "ரொம்ப அழகா பொருந்தி இருந்தாங்க தியா, என்னோட குடும்பத்துல. பார்க்க பார்க்க அவ்ளோ ஆசையா இருந்தது. வெண்மா கூட ஒரு நல்ல ஃப்ரெண்டா கலகலத்து, அப்பா சாப்பாட்டு விசயத்துல மிரட்டி, அம்மாவோட மிரட்டலுக்கு பயந்துன்னு பக்காவா எங்க வீட்டுக்கு ஏத்த மருமகள்ன்னு பேர் வாங்கிட்டாங்க. நீயும் அது மாதிரி என்னோட வீட்டுல ஒரு ஆளா பொருந்திட்டா போதும் தியா. என்னோட லைஃப் முழுக்க சந்தோஷமா இருக்கும்." என்று தன் எதிர்பார்ப்பைத் தியாவிடம் கூறியதற்கு, ‘அவளைப் போல் நானா!’ என உள்ளுக்குள் உண்டான கடுப்பை மறைத்து,   "என்னை யாரு கூடவும் கம்பேர் பண்ணாத இந்தர். நான் உங்க கூட பொருந்தி இருந்தா மட்டும் போதும்." என்று கொஞ்சும் குரலில...

உறவு 15

  அத்தியாயம்: 15   மஞ்சள் கயிறு மேஜிக்...   கேள்வியுற்றதுண்டா அதை?   உண்டு என்றால் அதில் நம்பிக்கை உள்ளதா?   மேஜிக் என்ற கண்கட்டி வித்தையின் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் அதைச் செய்வதாகக் கூறும் மஞ்சள் கயிற்றின் மீது நம்பிக்கை இருக்கிறது. அந்தக் கயிறு தான் கணவனுக்கு மனைவி மீதும், மனைவிக்கு கணவன் மீதும் உள்ள உரிமையை ஊரறிய பறைசாற்றுகிறது. அது இவன்(ள்) தனக்கானவன்(ள்) என்று இதயத்தின் ஆழம் வரையிலும் நேசம், மரியாதை, காதல், துணையிடம் மட்டுமே எதிர்பார்க்க வேண்டிய சில இச்சை உணர்வுகள் எனப் பலவற்றை வேர் விட வைக்கிறது.   நம் தர்மாவையும் அந்தக் கயிறு விட்டு வைக்கவில்லை. வித்தையைக் காட்டத் தொடங்கியிருந்தது‌.   மரியாதை ஆர்த்தியின் மீது தர்மாவிற்கு எப்பொழுதுமே உண்டு. பெண்களுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அவன் மரியாதை கொடுக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம். அவளிடம் கலந்து பேசி அவளின் அபிப்பிராயம் கேட்காது எதையும் செய்ய மாட்டான். என்ன பேசினாலும் வாயைத் திறக்க மாட்டேன் என்று அடமாக நிற்பவளை, மிரட்டி விரட்டியே அவளின் மனத்தில் உள்ளதைக் கொட்ட வைத்த...

like

Ad