அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். " "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க, "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?" "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?" "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என நேம் போர்டை காட்டிய...
அத்தியாயம்: 25 தன்னை விடச் சிறியவளாகினும்… தங்கத்தை விட உயர்ந்தவளாக… அண்ணனின் உள்ளத்தில்... வாழ்ந்து கொண்டிருப்பவள் அவள்... ஒரு ஆண் அறியும்… இரண்டாவது அன்னை... உடன் பிறந்தவள்... மனமானது சற்று லேசாக இருந்தது. தன் தங்கையின் கல்லறையைக் காண்கையில். ஏனோ இதற்குக் காரணமானவர்களை நெருங்கி விட்டதை போல் ஒரு உணர்வு. தங்கையை இழந்ததற்கு பழி வாங்க தயாராக இரு என்றது மனம். எந்த வழியும் கிடைக்காத போதும், கிடைத்துவிட்டதை போல் நிறைந்து போனது மனம். ஏன் என்று தான் புரியவில்லை. தங்கையின் கல்லறையில் இருந்த மலர்களில் வந்தமர்ந்த சில பட்டாம்பூச்சிகளை கண்டவன் நிறைந்த புன்னகையுடன் வீடு திரும்ப, ஒரு இனிப்புக் கடை கண்ணில் பட்டது. நேற்று பவதாவிடம் சண்டையிட்டு கடைசி ஸ்பூன் அல்லவாவை அவளுக்குத் தராது உண்டதால் கோபமாக முகம் திருப்பிச் சென்றது நினைவு வர, அந்தக் கடையில் குலோப்ஜாமுனை வாங்கிக் கொடுத்துச் சமாதானம் செய்ய நினைத்தான். வீடு வந்தவன் ஹாலில் அமர்ந்திருந்தவளிடம் தர. அவளோ. "எனக்கு வேண்டாம். நா கேக்கும்போது தந்திங்களா. இல்லல்ல. இப்ப எனக்கு வேண்டாம். " என எழுந்து செல்ல, "என்ன ACP. உன்னோட பாப்பா கோயிச்...