முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பனி 25

அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை.  'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார்.  அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...

விழி 25

  அத்தியாயம்: 25 தன்னை விடச் சிறியவளாகினும்… தங்கத்தை விட உயர்ந்தவளாக… அண்ணனின் உள்ளத்தில்... வாழ்ந்து கொண்டிருப்பவள் அவள்.‌.. ஒரு ஆண் அறியும்… இரண்டாவது அன்னை... உடன் பிறந்தவள்... மனமானது சற்று லேசாக இருந்தது. தன் தங்கையின் கல்லறையைக் காண்கையில். ஏனோ இதற்குக் காரணமானவர்களை நெருங்கி விட்டதை போல் ஒரு உணர்வு. தங்கையை இழந்ததற்கு பழி வாங்க தயாராக இரு என்றது மனம். எந்த வழியும் கிடைக்காத போதும்‌, கிடைத்துவிட்டதை போல் நிறைந்து போனது மனம். ஏன் என்று தான் புரியவில்லை. தங்கையின் கல்லறையில் இருந்த மலர்களில் வந்தமர்ந்த சில பட்டாம்பூச்சிகளை கண்டவன் நிறைந்த புன்னகையுடன் வீடு திரும்ப, ஒரு இனிப்புக் கடை கண்ணில் பட்டது. நேற்று பவதாவிடம் சண்டையிட்டு கடைசி ஸ்பூன் அல்லவாவை அவளுக்குத் தராது உண்டதால் கோபமாக முகம் திருப்பிச் சென்றது நினைவு வர, அந்தக் கடையில் குலோப்ஜாமுனை வாங்கிக் கொடுத்துச் சமாதானம் செய்ய நினைத்தான். வீடு வந்தவன் ஹாலில் அமர்ந்திருந்தவளிடம் தர. அவளோ. "எனக்கு வேண்டாம். நா கேக்கும்போது தந்திங்களா. இல்லல்ல. இப்ப எனக்கு வேண்டாம். " என எழுந்து செல்ல, "என்ன ACP. உன்னோட பாப்பா கோயிச்...

விழி 24

  அத்தியாயம்: 24 "என்ன தனா? இந்த நேரத்துல கூப்பிட மாட்டியே. என்ன விசயம்?. " என்றது அந்தக் குரல். " அது ஒன்னுமில்லை.‌ நம்ம ப்ளான்ல எதுவும் சேஜ் இருக்கா?. இல்ல அத வேற தேதிக்கு மாத்திடலாமா?. " தன்செயன் சற்று பயந்த குரலில், ஃபோனில் பேசிக் கொண்டு இருக்கிறார். " ஏ?. என்னாச்சி?. " "கொஞ்சம் பயமா இருக்கு. " "எதுக்கு நீ இப்ப தேவையில்லாம பயப்படுற?. எத்தன மொற‌ இந்த மாறிப் பண்ணிருக்கோம்!. அப்பெல்லாம் நீ இந்த வார்த்தைய சொன்னதே இல்லையே. இன்னைக்கி ஏ இத சொல்ற." என்றது அந்தக் குரல். "மனசுக்கு எதோ சரின்னு படல. இது வேண்டாமே. இந்த மொற மட்டும் தா. அடுத்ததுல பாத்துக்கலாம். " என்க. எதிரில் கேட்ட குரல் கோபமாக வந்தது. " யூ இடியட். ***. நம்ம தொழில்ல டயமிங்க தா முக்கியம். நாம ஆல்ரெடி பேசி எல்லா ஏற்பாட்டையும் செஞ்சி காச வாங்கியாச்சி. இப்ப முடியாதுன்னு சொன்னா என்ன ஆகும். நம்ம மேல கஸ்டமருக்கு இருக்குற நம்பிக்க போய்டாது. அதுமட்டுமில்ல இப்ப நம்மகிட்ட டீலிங்க வைச்சவெ பெரியாளு. நம்மல சும்மா விடமாட்டான். ஒட்டு மொத்தமா நம்மல இல்லாம ஆக்கிடுவான். ம்ச். இது பல...

like

Ad