முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பனி 57

அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். "  "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல‌‌…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க,  "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?"  "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?"  "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என‌ நேம் போர்டை காட்டிய...

நின்னையல்லால் 53

  நின்னை - 53 ஆழ் நிலை மயக்கத்தில் இருந்து மங்கலாக நினைவு திரும்பியது வாமனுக்கு. கண் இமை திறக்க முன் அவன் உள் உணர்வுகள் விழித்தன. இதமான குளிர்.. வளைவான பாதையில் வந்து கொண்டிருந்தான்.. டிப்பர் சத்தமும் ஹெட்லைட் ஒளியும் பாய்ந்து வந்தன.. அவன் வேகமாக தாவ நினைத்து தடுமாறுகிறான்.. வாகனம் மோதுண்டதும் அள்ளுண்டு சாலையில் எறியப்பட்டான்.. ஆ.. உடல் அதனால் தான் அணுஅணுவாய் வலிக்கிறது.. அப்பா என உச்சரித்தான்...  கை நடுங்கியது.. பற்றி இருந்த ஃபோனை தேடினான்.. அது கிடைக்கவில்லை.. யாரோ இருவர் வந்தார்கள் அவன் அருகில்.. அவனை கை கால் பிடித்து நகர்த்தினார்கள்.. மூக்கில் கை வைத்துப் பார் உயிர் இருக்கிறதா என்று? அதில் ஒருவன் சிங்களத்தில் சொன்னான். நான் உயிருடனேயே இருக்கிறேன்.. மனசுக்குள் அலறினான்... ஆம்பிலன்ஸுக்கு அழை என்றான் மற்றவன். ஓம்! என்னை காப்பாற்றுங்கள்.. ஹாசினி!! ஹாசினி தனியாக இருக்கிறாள்..  மறுமடியும் தூக்கினார்கள்.. உய்ய் உய்ய் என ஆமபிலன்ஸ் அலறியது.. இருள் சூழ்ந்தது.. நினைவு தப்பியது.. அதன் பிறகு நடந்தவை எதுவும் நினைவில் இல்லையே... இமை பிரித்தான் வாமன். மருந்து நெடி அடித்தது. பாராங் கல...

பனி 45

  அத்தியாயம்: 45 ஒவ்வொரு உறவிற்கும்… எதிர்பார்ப்புகள் உண்டு…  ஆனால் எதிர்பார்ப்பு இல்லாமல்… கிடைக்கும் ஒன்று அன்பு… எவ்வளவு தான் காயப்படுத்தினாலும்… நாம் நேசித்த இதயத்தை மட்டும்…  மறக்கவோ வெறுக்கவோ… முடியவில்லையெனில் அது… உண்மையான அன்பு…  பைரவியிடம் இருப்பது போல். மதுவின் காயத்தைத் தவிர வேறு எதுவும் அவளின் கண்களுக்குத் தெரியவில்லை. மையிட்ட விழிகள் கலங்கி கண்ணீரைத் தேக்கி வைத்து நின்றன.  மதுவிற்கு அழுபவரை பிடிக்காது. ஏமாற்றி காரியம் சாதிக்க சுரக்கும் கானல் நீர்,  கண்ணீர் என்பான். திருமணம் முடிந்த புதிதில் பைரவிக்கு எதற்கெடுத்தாலும் கண்ணீர் வரும்‌. தான் எதிர்பார்த்தது போல் திருமண வாழ்வு அமையவில்லை என்ற ஏமாற்றத்தில் அழுகை வர, "இதோ பாரு… கண்ணீர் விட்டுட்டே பேசுறதா இருந்தா தயவு செய்து போய்டு. நீ சொல்ற எதையும் நான் கேக்கவோ நம்பவோ மாட்டேன். போ... " எனத் தன் முன் அழும் மனைவியைத் துரத்தி விடுவான். அவளும் அப்போது எதுவும் சொல்லாது சமயலறை புகுந்து தன் அழுகையைத் தொடர்வாள்.  இப்போது வந்த அந்த நீர் எதற்கானது என உணரும் போது மதுவின் உள்ளம் பைரவியின் அன்பில் கரைய காத்தி...

நின்னையல்லால் 52

 நின்னை - 52 பதுளை மாகாண பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவின் கட்டிலில் கிடத்தி இருந்த சாத்விக்கு விழிப்பு தட்டியது. இமைகளை பிரித்தவள் தான் இருக்கும் சூழலை கண் சுழட்டி கவனித்தாள். கையில் சேலன் ஒரு போத்தல் ஏறி இருந்தது. மருந்து நெடி கனமாக நாசியில் அடிக்க, தான் இருக்கும் இடம், வந்த நோக்கம் எல்லாம் பளிச் என நினைவுக்கு வந்ததும் விருட் என எழுந்து அமர்ந்தாள். எழுந்தவள் கட்டில் விட்டு இறங்கும் போது அங்கிருந்த செவிலி இவளைக் கவனித்து வந்தாள். “தங் கோஹமத ஒயாட்ட?”  கேள்வி என்னவாக வேண்டும் என்றாலும் இருக்கட்டுமே. சாத்வி தயங்காமல் பதில் தந்தாள் தமிழில். “எனக்கு அவர பாக்கணும்” “மொக்கத்த.. சிங்கள தன் நெத்த?” இது ஒரு நாசமறுப்பு!! புரியாத பாஷையில் கொல்கிறார்கள்!! சாத்வி கட்டிலில் இருந்து இறங்கினாள். இவள் கழுத்தில் கிடந்த தாலிக் கொடி வைத்தே தமிழ் பிள்ளை என்று கணித்து இருந்த அந்த செவிலி, வேறொரு வெள்ளைச் சீருடை தாதியை அழைத்து வந்தாள். “இப்ப எப்டிமா இருக்கு உங்களுக்கு?” அவள் தமிழ் பேசினாள். தத்தளிக்கும் தண்ணியில் பற்றிக்கொள்ளக் கிடைத்த மரக் கட்டை போல அந்த தாதியை பார்த்தாள் சாத்வி. “மிஸ்! என்ர ஹ...

பனி 44

  அத்தியாயம்: 44 "ஹலோ ராக்கி பாய்… ராக்கி பாய்… லையன்ல இருக்கிங்களா? ஹலோ... ஹலோ..‌." என மெதுவாக ஹஸ்கி வாஸ்ஸில் பேசினாள் பைரவி. ஆனால் பேசிக் கொண்டே இருந்தாள்.  "ஒரு நிமிஷம் இரு பக்கி... ஒரு பொசிஷனுக்கு வந்துக்கிறேன். உன் புருஷனுக்கு மட்டும் நான் உங்கூட கூட்டு வச்சது தெரிஞ்சது…"  "உங்களக் கூட்டு பொரியலாக்கிடுவாரு. சரியா… " எனச் சொல்லி சிரிக்க,  "தெரிஞ்சிட்டே கேக்குறியேம்மா நீ… ஆமா நான் ஹஸ்கி வாய்ஸ்ல பேசுறேன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு. ஏன்னா எம்முன்னாடி தான் உன் புருஷெ உக்காந்திருக்கான். நீ ஏன் ஹஸ்கி வாஸ்ல பேசுற?" என அவனும் அவளை போல் மெதுவாக பேச,  "சும்மா உங்களுக்கு கம்பெனி குடுப்போமேன்னு தான் பேசி பாத்தேன்."  "கம்பெனியெல்லாம் தேவையில்லை நார்மலாவே பேசு. காதுக்குள்ள நீ பேசுறது பிசாசு படத்துல வர்ற பேய் பேசுனா மாதிரி ஃபீல் ஆகுது."  "ஓகே. இப்ப நீங்க எங்க இருக்கிங்க?"  " இப்ப தான் அகாடமிக்கி வந்திருக்கான் உம்புருஷெ. ஆஃபிஸ் ரூம்ல இருக்கோம். இன்னும் பத்து நிமிசத்துல நாங்க கிளம்பிடுவோம். ஓவர்... ஓவர்… பட் இது ரொம்ப ஓவரா...

like

Ad