அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை. 'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார். அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...
அத்தியாயம்: 36 டம்... டமார்... பாத்திரங்கள் உருளும் சத்தம் அது. அந்த வீட்டின் மூத்த மருமகள் மலர்மங்கை கோபமாக உள்ளார் என்று அர்த்தம். 'பின்ன மகன் பொண்ண கூட்டீட்டு வர்றேன்னு சொல்லிட்டு பொண்டாட்டியா கூட்டிட்டு வந்தா! ' வாடா மகனேன்னு.' வரவேற்பாங்களா என்ன?. கோபத்துல சமக்கட்டையே தொம்சம் பண்ணிட்டு இருக்காங்க.' "டேய்!. உங்கிட்ட நேத்தே என்ன சொன்னேன். உம்பக்கம் பேச ஆளுகள சேருன்னு சொன்னேனா இல்லயா?." "நா ஃபோன் பண்ணேண்ணே." "அப்ப எங்கடா நம்ம நட்சத்திர பேச்சாளர்கள். ஒருத்தரையும் காணுமே!. நாம வர்ற தகவல சரியா சொன்னியா இல்லையா?." "அது நா ஃபோன் பண்ணேனா! ஆனா, யாருமே எடுக்கல. சரி வந்து பேசிக்கிவோம்னு விட்டுட்டேன். எங்காத்தா வாயிமேலையே நாலு போடு போட்டு, பேச விடாம ஓரமா ஒதுக்கி வச்சிடு வாங்கன்னு யாரு கண்டா!." என்றவனை முறைத்தான் கௌதம். "கௌதம், வீட்டுல இப்போதைக்கி சிக்குன ஆடு நாம நாலு பேர் மட்டும் தான். மத்த ஆம்பளைங்க யாரும் வீட்டுல இல்ல." சம்பத், உடன் வேல்ராஜிம் இருந்தான். பிரகாஷிற்கு நாளை மறுநாள் திருமணம் செய்ய எல்லா ஏற்பாடுகளும் செய்ய...