முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பனி 25

அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை.  'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார்.  அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...

விழி 3

  அத்தியாயம்: 3 ஊட்டி... மலைகளின் இளவரசி. இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து. உடலை உறைய வைக்கும் இமயமலையின் பனி போல் இல்லாமல், இதமாய் வருடிச் சொல்லும் மெல்லிய குளிர், நம் அடிமனதை மெதுவாகத் தொட்டுச் செல்லும்.  சுகமாக அதே சமயம் இதமாகவும் ரசித்து அனுபவிக்கும் படி இருக்கும் உதகமண்டலத்தின் சீதோஷ சூழ்நிலை. நீலகிரி நம் தமிழ்நாட்டின் வைரக்கல் அல்லவா. சுமார் ஏழாயிரம் அடி உயரத்தில் உள்ளது.  எண்ணிலடங்காத உயிர்களின் உறைவிடம். கண்டு பிடிக்கப் படாத மூலிகைச் செடிகளின் பாதுகாவலன். யாரின் உதவியுமின்றி இயற்கை எழுப்பிய மதில்‌ அது.‌ அங்குத் தான் இருக்கிறோம் நாம்.  தொட்டபெட்டா...  இயற்கை அழகை முழுமையாக ரசிக்கச் சரியான இடம். தமிழகத்தின் உயர்ந்த சிகரம் அது. நீலகிரியின் மூடுபனி நிறைந்த அந்தப் பச்சை மலை காடுகளின் நிகரற்ற அழகை ஒரு பறவைபோல் மேலிருந்து ரசிக்கத் தொட்டபொட்டா சிறந்த இடம்.‌  அதில் ஓரிடத்தில் கர்நாடக எல்லை ஆரம்பம் என எழுதி இருந்தது. "ஹேய் பவதா உன்ன ஒரே நொடில நம்ம பக்கத்து ஸ்டேட்டுக்கு கூட்டிட்டு போகவா. ம்... வா." எனத் தன் மனைவியின் கரம்பற்றி இழுக்க, பொம்மைபோல் அவன் உடன் சென்றாள் ...

விழி 2

  அத்தியாயம்: 2 "ஸார் என்னோட பேரு மணிராம். கோயம்புத்தூர்ல படிச்சிட்டு, அங்கேயே ஒரு துணிக் கடைல வேல பாக்குறேன்."  "உன்னோட நேட்டிவ் எது.? கோயம்புத்தூர் தானா!." ஜீவா. "இல்ல ஸார். சென்னை தா."  "அப்பாம்மா என்ன பண்றாங்க.?" மனோ. "அப்பா வாட்ச்மேன் ஸார். அம்மா வீட்டு வேல செய்றாங்க. அவங்களுக்கு நா மட்டும் தா பிள்ள. வேற யாரும் கிடையாது." மணி சொல்ல, அவனின் தலையில் தட்டினான் மனோ.  "வேற யாரும் இல்லங்கிற. நீ செத்துட்டா அவங்க என்ன ஆவாங்கன்னு யோசிச்சியா டா." ஜீவா.  "சாகனும்னு நினைச்சி பண்ணல ஸார். உங்கள மாறிப் பெரிய போலிஸ் பார்வைக்கி என்னோட கம்ப்ளைண்ட்ட கொண்டு போகனும்னு தான் ஸார் பண்ணேன். எனக்கு வேற வழி தெரியல ஸார். உங்கள மாறிப் போலிஸ் தான் ஸார் என்ன ஒரு கம்ப்ளைண்ட்டுக்காக ஸ்டேஷன் ஸ்டேஷனா அழைய விட்டாங்க. அதா ஸார்." எனப் படபடத்துப் பேச, "என்னன்னு கம்ப்ளைண்ட் குடுக்க போன." என ஜீவா கேட்க, மணி தன் ஃபோனில் உள்ள ஒரு புகைப்படத்தைக் காட்டினான்.  "பேரு சுருதி. என்னோட‌ கூட வேல பாக்குற பொண்ணு. நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம் ஸார்....

விழி 1

அத்தியாயம்: 1 சென்னை... தலைமை காவல் நிலையம்.  காக்கி உடையும் காவி பேண்ட்டும்மாகச் சிலர் சின்ஸியராக வேலை செய்தார்கள் என்றால் சிலர் வேறு வண்ண நிறத்தில் சட்டை போட்டு மஃப்ட்டியில் இருந்தனர். அது பெரிய வளாகம் ஆதலால் உள்ளே செல்லப் பல காவலர்களின் சந்தேக பார்வையை சந்திக்க வேண்டி இருந்தன. வளாகத்திற்கு வெளியே பல இருசக்கர வாகனங்கள், சில போலிஸ் பைக்குகள் என அந்த இடமே கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. யாரோ ஒரு நடிகை ஒரு தொழிலதிபர்மீது கம்ளைண்ட் செய்ய வந்துள்ளார். அதனால் மீடியாக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.  ஒரு சிறிய தோள் பையைத் தன் தோளில் மாட்டிக் கொண்டு, வியர்க்க விறுவிறுக்க ஒரு ஆண் மலங்க முழித்துக் கொண்டே கலங்கிய முகத்துடன் வந்தான். இளம் வயதினர் தான் அவன். வயது இருபதை தாண்டி இருக்கும். கல்லூரி செல்லும் மாணவன்போல் இருந்த அவன் அந்தக் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு காவலர்களின் பரிசோதனையின்றி உள்ளே வந்து‌ விட்டான். யாரின் கவனத்தையும் அப்போது ஈர்க்க விரும்பாமல் பூனை நடை நடந்தான் அவன். வெள்ளை நிற சட்டை அது பயத்தில் வடிந்த வியர்வையால் முழுதாக நனைந்திருந்தது. உடலெங்கும் பயத்தில் நடுங்க, அவ...

like

Ad