அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். " "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க, "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?" "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?" "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என நேம் போர்டை காட்டிய...
அத்தியாயம்: 3 ஊட்டி... மலைகளின் இளவரசி. இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து. உடலை உறைய வைக்கும் இமயமலையின் பனி போல் இல்லாமல், இதமாய் வருடிச் சொல்லும் மெல்லிய குளிர், நம் அடிமனதை மெதுவாகத் தொட்டுச் செல்லும். சுகமாக அதே சமயம் இதமாகவும் ரசித்து அனுபவிக்கும் படி இருக்கும் உதகமண்டலத்தின் சீதோஷ சூழ்நிலை. நீலகிரி நம் தமிழ்நாட்டின் வைரக்கல் அல்லவா. சுமார் ஏழாயிரம் அடி உயரத்தில் உள்ளது. எண்ணிலடங்காத உயிர்களின் உறைவிடம். கண்டு பிடிக்கப் படாத மூலிகைச் செடிகளின் பாதுகாவலன். யாரின் உதவியுமின்றி இயற்கை எழுப்பிய மதில் அது. அங்குத் தான் இருக்கிறோம் நாம். தொட்டபெட்டா... இயற்கை அழகை முழுமையாக ரசிக்கச் சரியான இடம். தமிழகத்தின் உயர்ந்த சிகரம் அது. நீலகிரியின் மூடுபனி நிறைந்த அந்தப் பச்சை மலை காடுகளின் நிகரற்ற அழகை ஒரு பறவைபோல் மேலிருந்து ரசிக்கத் தொட்டபொட்டா சிறந்த இடம். அதில் ஓரிடத்தில் கர்நாடக எல்லை ஆரம்பம் என எழுதி இருந்தது. "ஹேய் பவதா உன்ன ஒரே நொடில நம்ம பக்கத்து ஸ்டேட்டுக்கு கூட்டிட்டு போகவா. ம்... வா." எனத் தன் மனைவியின் கரம்பற்றி இழுக்க, பொம்மைபோல் அவன் உடன் சென்றாள் ...