அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை. 'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார். அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...
அத்தியாயம்: 15 "மா… மா. சொல்லு. கார்த்தி மாமா. ரொம்ப ஈஸி தான்டா. எங்க சொல்லு கேப்போம். சொல்லுடா. " என மிரட்டிக் கொண்டு இருந்தான் கார்த்திகேயன். ஆனால் அவனுக்கு எதிரில் இருந்த வாண்டுவோ. ' அந்த மாறில்லாம் கூப்பிட முடியாது ' என்பது போல் பார்த்தான் அந்த ஐந்து வயது சிறுவன். " டேய் சொல்லிட்டே இருக்கேன் நீ என்னடான்னா மொறச்சி பாத்துட்டே உக்காந்திருக்க. சொல்லுடா குட்ட வாத்து. மா…மா. சொல்லுங்கிறேன்ல." என அந்தச் சிறுவனின் சட்டையைப் பிடித்து உயர்த்தி உலுக்கி மிரட்ட, ' புயலே ஊருக்குள்ள புகுந்து விளையாண்டாலும் நாங்க நகராம நட்டுக்கிட்டு தா நிப்போம். ' என்பது போல் சிறுவன் அசராது நிற்க. "அடிங்க... உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா என்டவே உ திமிருதனத்த காட்டுவ... உன்ன. " என அடிக்கக் கை ஓங்க, "கார்த்தி என்ன பண்ற. " என்ற பெண்ணின் குரல் தடுத்தது. " ம்ச்… பாத்தா தெரியல இவனோட தோல உரிச்சி வெயில்ல காயப்போட்டு இவன கருவாடாட்டம் எடுக்கப் போறேன். " எனத் தலைக்கு மேலாக அந்த சிறுவனைத் தூக்க, "கார்த்தி. அவன கீழ இறக்கி விடு. " " முடியாது. ...