அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை. 'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார். அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...
அத்தியாயம்: 36 "வாசு... வாசு… என்னோட கைய யாரோ சுரண்டுற மாதிரி இருக்கு. " என்றாள் தன்யா வாசுவின் காதருகில். " நீ என்ன லக்கி ட்ரா கூப்பன்னா?. சுரண்டிச் சுரண்டி அதிஷ்டத்த பரிசோதிக்க. " என்றவளின் குரலில் விளையாடாதே தன்யா என்ற பொருள் இருந்தது. " ம்ச்... வாசு நான் பொய் சொல்லல. நான் பாக்காத நேரம் அந்தாளு என்னைப் பாக்குறான். நான் பாத்தா திரும்பிங்கிறான். " "உங்கூட அவனுக்கு விளையாடணும்னு தோணுது போல. நீங்க அந்தப் பக்கமா ஓரமா போய் விளையாடுங்க. எங்கள டிஸ்டப் பண்ணாதிங்க. நாங்களே தி கிரேட் கிரிகாலான் அளவுக்கு இல்லன்னாலும் ஓரளவுக்கு தான் இந்த மேஜிக் ஷோ இருக்கேன்னு சோகமா பாத்துட்டு இருக்கேன். இதுல நீ வேற. " தன்யா திரும்பி அந்த ஆடவனைப் பார்த்தாள். அத்தனை நேரம் அவள் பக்கம் திரும்பியிருந்த கழுத்து இப்போது வேறு பக்கம் திரும்பிக் கொண்டது. "வாசு... வாசு… இப்ப அவெ என்னைப் பாத்தான். ஆனா நான் பாக்கவும் திரும்பிட்டான். " என அவசர அவசரமாகச் சொல்ல, வாசு எட்டி பார்த்தாள். முகம் சரியாக அந்த இருளில் தெரியவில்லை. " யாருன்னு எனக்குச் சரியா தெரியலயே. " ...