அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். " "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க, "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?" "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?" "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என நேம் போர்டை காட்டிய...
அத்தியாயம்: 99 இரு கைகளையும் பிசைந்து கொண்டு அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு, பேந்த பேந்த முழித்தபடி நின்றிருந்தாள் வாணி.. "கார்த்தி... " எனக் கெஞ்சலாக வந்தத அந்தக் குரல் காதில் விழுந்தாலும் திரும்பி பார்க்கவில்லை அவன். "கார்த்தி மாமா... " எனக் கொஞ்ச அழைக்க, திரும்பி பார்த்து தன் விழியென்னும் கதிரவனால் அக்கினி சுவாலைகளை அவளை நோக்கி வீசினான். " ம்ச்... ஸாரி கார்த்தி மாமா. நான் இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல. ஸாரி மாமா. " என்றாள் கொஞ்சலாக. "அடிங்க... வாய மூடு டி. பண்றதெல்லாம் பண்ணிட்டு மாமா வோமாண்டு. செம்ம கடுப்புல இருக்கேன். பேசமா இரு. இல்ல... " "இல்லன்னா என்ன பண்ணுவ மாமா?. அடிப்பியா! கன்னத்துலயா! கைலயா?. " எனக் கேட்டவளை ஒன்றுமே செய்ய முடியாது. பைக்கை உருட்டிக் கொண்டு நடந்தவனை ‘மாமா… மாமா…’ என வம்பு செய்த படி உடன் நடந்தாள் வாணி. அவனும் கடுப்புடன் திட்டிக் கொண்டே வந்தான். "இப்பல்லாம் என்னை ரொம்ப திட்டுற மாமா நீ. " என்றாற் சிணுங்களாக. "நீ செஞ்ச காரியம் அப்படி. உரசாம தள்ளி நடடி. " என எரிந்து விழுந்தான். அதை அணைக்...