முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பனி 25

அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை.  'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார்.  அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...

பனி 6

  அத்தியாயம்: 6 "இந்த ஹைவேஸ்ல டார்ச் அடிச்சி லாரிய மடக்கி தொழில் பண்ற கும்பல சேந்தவ தான நீ. இல்ல லிஃப்ட் கேட்டு ஏறுற மாதிரி ஏறி மயக்க மருந்து அடிச்சி கார ஆட்டைய போடுற கும்பலா? பாக்க அப்ரானி மாதிரி காட்டீட்டு ஆளுங்கள கொல பண்ற கூட்டமா! என்ன நீ மட்டும் தனியா இருக்க? எங்க உ கூட்டாளிங்க? " என ராக்கி சுற்று முற்றிலும் பார்த்து கேட்க,  "ஸார், நீங்க நினைக்கிற மாதிரில்லாம் கிடையாது. என்னைத் துரத்திட்டு வர்றாங்க ஸார். அவங்க கைல நான் மாட்டுனா என்னாகும்னே தெரியல ஸார். ப்ளிஸ் ஸார். அவெங்கல்லாம் ரவுடி பசங்க ஸார். என்னை ஆள் நடமாட்டம் இருக்கிற, இல்ல மதுர பஸ்ல ஏத்தி விட்டிங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும் ஸார்.. " எனக் கெஞ்சவும் அவளைத் தேடி வந்த அடியாள்களில் ஒருவன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.  "டேய் இங்க இருக்காடா." என அவர்களில் ஒருவன் குரல் கொடுக்க, மற்ற அனைவரும் ஓடி வந்து காரைச் சுற்றிக் கொண்டு நின்றனர்.  "ம்... வா... " என அழைக்க, அவள் ராக்கியின் பின்னே ஒழிந்து நின்றாள்‌‌.‌ "ம்ச்... ஒழுங்கா வந்திடு. இல்லன்னா அடிச்சி இழுத்திட்டு போக வேண்டி இருக்கும்....

பனி 5

  அத்தியாயம்: 5 'அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க சற சற சற சரக்க மொத மொத மொற ஊத்தி குடிச்சேன் கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க முடி முடியல அடியே அடி மனசுல வெம்பி வெடிச்சேன்' இது காரில் ஒளிபரப்பாக, ராக்கி தான் தலையை அசைத்து அசைத்து பாடலை ரசித்து ராகம் படிக் கொண்டும் தாளம் தட்டிக் கொண்டும் வந்தான். மது அமைதியாக இன்று நடந்தவற்றை நினைத்த படியே காரை இயக்கினான். இருவருமே குடித்திருந்தனர். ஆனால் அளவாக. "மச்சி‌ அதிசயமா இருக்கு கார்ல ப்ளேயர நீ ஆன் பண்ண விடுறதும்.. அத நான் உம்பக்கத்துல உக்காந்து பாடிக்கிட்டே வர்றதும்… இன்னைக்கி நீ பண்ணதும் ரொம்ப பிடிச்சிருந்தது. உன்னைப் புதுசா பாத்த மாதிரி இருக்கு." என ராக்கி சொல்ல, மது சைடு மிரர் வழியே தன் முகம் பார்த்தான். கண்ணாடியில் தன்னைப் பார்க்கும் போது, ‘இது நானா?’ என்றிருந்தது மதுவிற்கு. இன்று கோர்ட்டில் அவ்வாறு ஆடியது நானா. "போன மாசம் மச்சி… லைசன்ஸ் எக்ஸ்பயர் ஆகிடுச்சி போல. அது தெரியாம நாம் பாட்டுக்கு வண்டிய ஓட்ட… போக்குவரத்து போலிஸ் பிடிச்சி நிப்பாட்டி, 'ஏன்டா லைசன்ஸ ரென்யூ பண்ணல. ஃபைன்ன எடு'ன்னு சொல்லி வண்டிய ஓரங்கட்டி சாவிய ...

பனி 4

அத்தியாயம்: 4 காலை வேளை..  நேரம் ஒன்பது மணி... பைரவி மிடுக்காய் தன் கஞ்சி போட்ட யூனிபார்மை அணியாது, ஃபார்மல் ஷர்ட் மற்றும் காக்கி பேண்ட் அணிந்திருந்தாள். காலில் இருந்த காக்கி ஷூ வின் லேஸ்ஸை, அங்கிருந்த ஸ்லிப்பர் ஸ்டான்டில் காலை தூக்கி வைத்து கட்டி முடித்துவிட்டு புறப்பட தயாராக இருந்தாள். சாரு, "குட் மார்னிங் பையூ… டிப்பன்?"   "வேண்டாம்பா. அம்மா எனக்காகச் சமச்சி வச்சிட்டு காத்திட்டு இருப்பாங்க. அவங்க கிட்ட திட்டு வாங்கிக்கிட்டே சாப்பிட்டாத்தான் வயிறு நிறைஞ்ச ஃபீல் வரும். அத்தோட இன்னைக்கி வியாழக்கிழம. சாய் பாபா கோயிலுக்குப் போவாங்க. நான் தான் அவங்கள இறக்கி விடணும்.‌" என்றவள் தன் சாப்பரை எடுத்துக் கொண்டு அன்னை வீட்டிற்குச் சென்றாள். அங்கு அவள் சொன்னது போல் சாந்தி அவளுக்குப் பிடித்த பூரியைச் சுட்டு வைத்துவிட்டு, அதை வாயில் வைக்க விடாமல் திட்டுக் கொண்டே இருந்தார்.  கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற கொள்கை கொண்டவள் பைரவி. அதான் அன்னையிடம் திட்டு வாங்கினாலும்‌ மகளாய் அவருக்குச் செய்ய வேண்டியதைச் செய்ய தவறியது இல்லை. ஏனெனில் அவள் அந்த வீட்டின் பெண் வாரிசு மட்டுமல்ல, ஆண் வ...

like

Ad